Pages

Saturday, 15 December 2012

‘ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை’க் காணவில்லை – பிரான்செஸ் ஹரிசன் சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப்புலிகளின்
கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்த வன்னியில் ‘ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை’க் காணவில்லை என பி.பி.சி சேவையின் செய்தியாளராக 2000-2004 வரை சிறிலங்காவில் கடமையாற்றிய வரும், சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட ‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன’ என்ற நூலின் ஆசிரியருமான பிரான்செஸ் ஹரிசன் இந்திய ஊடகங்களுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.இவ்வாறு காணாமற் போன மக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் இவ்வளவு பெருந்தொகையான மக்கள் காணாமற் போயுள்ளதை உலக வங்கியின் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் மூலம் தன்னால் உறுதிப்படுத்த முடிவதாகவும் பிரான்செஸ் ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.”இதில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களோ அல்லது நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையோ உள்ளடக்கப்படாதிருக்கலாம். ஆனால் சிறிலங்காவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் காணாமற் போன இந்த மக்கள் தொடர்பில் இந்நாட்டு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்” என பி.பி.சி முன்னாள் செய்தியாளர் இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் உலக வங்கியால் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், யுத்தத்தின் பின்னர் 1.06 இலட்சம் பேர் காணாமற் போயுள்ளதாக இவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். விரைவில் தமிழ் மொழியிலும் வெளிவரவுள்ள மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன என்ற நூலில், சிறிலங்காவின் இறுதிக் கட்ட யுத்தத்தில் அகப்பட்டுத் தப்பிப்பிழைத்த முன்னாள் புலி உறுப்பினர், மருத்துவ தாதி, அருட்சகோதரி, ஆசிரியர் போன்ற பல்வேறு தரப்பினரின் யுத்த அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நூலில் யுத்தத்திலிருந்து உயிர் தப்பியவர்களின் சாட்சியங்கள் மட்டுமல்லாது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் நூலாசிரியர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

3 comments:

  1. ex telo anral enna artham annai

    ReplyDelete
  2. பெரிதாக ஒண்றும் அர்த்தம் கொள்ளவேண்டாம். சும்மா ஒரு பந்தா தான் !தவறு என்றால் சொல்லுங்கள் அந்த Ex. ஐ எடுத்துவிட்டு பொருத்தமான வேறு எதையாவது சேர்த்துவிடுவோம்!

    ReplyDelete