Pages

Tuesday, 30 July 2013

அடைக்கலநாதன் எம்.பி நவம்பரில் சாகும் வரை உண்ணாவிரதம் – வவுனியாவில் சுவரொட்டிகள் (படங்கள்)..!

தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிலதினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக டெலோ அமைப்பினரால் நாடுமுழுவது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.
இதேவேளை இன்று மாலை வவுனியாவின் பல பகுதிகளிலும் இச்சுவரொட்டிகள் ஓட்டப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.

vavuniya1 vavuniya2
vavuniya3 


http://www.vavuniyanet.com/?p=7107

Monday, 29 July 2013

தமிழ் மக்கள் முழுமையாக வாக்களிப்பதன் மூலமே உரிமையை பெற்றுக்கொள்ளமுடியும் - ஜனா


வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமது வாக்கு பலத்தினை சரியான முறையில் முழுமையாக பயன்படுத்துவதன் மூலமே எதிர்காலத்தில் வடகிழக்கில் சகல அதிகாரங்களும் கொண்ட மக்களாக தமிழ் மக்கள் வாழமுடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரவெட்டி விநாயகர் ஆலயத்துக்கு மாகாண சபை உறுப்பினரான கருணாகரமின் பன்முகப்படுத்தப்பட்ட 75ஆயிரம் ரூபா நிதியொதுக்கீட்டில் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வு வவுணதீவு,கரவெட்டி விநாயகர் ஆலய முன்றிலில் கரவெட்டி பிரதேச கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றய அவர்,

வுடக்கு தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.வடக்கு தேர்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகவும் பயந்த நிலையில் உள்ளது.இந்த தேர்தல் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு முக்கியத்துவமானதாகும்.

இன்று வடக்கு தேர்தலை உலக நாடுகள் உன்னிப்பாக பார்த்துகொண்டுள்ளன.இந்த தேர்தலில் பல குளறுபடிகளை செய்து அரசாங்க வெற்றிபெறமுயற்சிகளை மேற்கொள்ளும்.எவ்வாறாயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலில் வெற்றிபெறும்.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு முழு  மையாக வாக்களிக்காத காரணத்தினால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அதிகமாக ஆசனங்களை பெறமுடியவில்லை.கிழக்கில் தமிழ் மக்கள் மிகவும் குறைந்தளவிலேயே தமது வாக்குகளை பதிவுசெய்திருந்தனர்.

எமது முஸ்லிம் சமூகத்தினர் வாக்களிப்பு தினத்தன்று முதல்வேலையாகச்சென்று வாக்களித்துவிட்டே தமது ஏனைய பணிகளை மேற்கொண்டனர்.ஆனால் தமிழ் மக்கள் அதில் பெரிதாக அக்கறை செலுத்தாத நிலையே இருந்தது.

வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் ஒரே குறிக்கோளில் வாக்களிக்கவேண்டும்.தமிழ் மக்கள் முழுமையாக வாக்களிப்பதன் மூலமே வடகிழக்கில் தமிழ் மக்கள் முழு அதிகாரங்களும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

13வது அரசியலமைப்புச்சட்ட தமிழ் மக்களுக்கு இறுதி தீர்வு அல்ல.அதில் இருக்கும் அதிகாரங்களை நாங்கள் பயன்படுத்தி எமது உரிமையை பெற்றுக்கொள்ளும் இறுதித்தீர்வை நோக்கி பயனிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்தலாம்.அதனால்தான் இலங்கை அரசாங்கம் 13வது சட்டத்தினை இல்லாமல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இன்று அரசாங்கத்தில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் அபிவிருத்தியை காட்டி தமிழ் மக்களுக்கு உரிமை தேவையில்லையென்கின்றனர்.நாங்கள் கடந்த 30 வருடமாக உரிமைக்காகவே போராடினோம்.அபிவிருத்தி தேவையில்லையென்று நாங்கள் கூறவில்லை.உரிமையெதுவும் இல்லாத இடத்தில் அபிவிருத்தியால் எதுவித பிரயோசனமும் இல்லை.ஒரு கடைத்தெருவுக்கு தாயும் அவரது மகளான சிறுமியும் போயிருந்தனர்.சிறு கடைத்தெருவில் உள்ள கடைகளில் உள்ள பொருட்களை தாயிடம் அடிக்கடி கோரிக்கை விடுத்துக்கொண்டிருந்தாள்.பல கடைகளுக்கு சென்றபோதும் தாய் எதுவித விளையாட்டுப்பொருளும் வாங்கிக்கொடுக்கவில்லை.

சிறிது தூரம் சென்றதும் சனநெரிசலில் சிறுமி தாயை பிரிந்து தனியாக அழுதுகொண்டிருந்தால்.அதன்போது அப்பகுதியில் நின்றவர்கள் குழந்தையை அணுகி குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக பல்வேறு விளையாட்டுப்பொருட்களை வாங்கிக்கொடுத்தனர்.ஆனால் பிள்ளை அழுகையை நிறுத்தவில்லை.

அதுபோல் அழும் பிள்ளைக்கு அந்த தாய் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று தமிழ் மக்களுக்கு தாய்போன்ற அந்த உரிமை முக்கியம்.அந்த குழந்தைக்கு அந்த பொம்மைகள் தாயை காணாதவேளையில் எந்தவித பொருளும் பெரிதாக தெரியவில்லை.எனவே உரிமை இல்லாதவனுக்கு அபிவிருத்தியென்னும் பொருள் பெரிதாக தெரியப்போவதில்லை.இதனை அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ளவேண்டும்.







மன்னாரில் த.தே.கூ. வேட்பு மனுத்தாக்கல்:மக்கள் அமோக வரவேற்பு

வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காண வேட்பு மனுவினை தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இன்று காலை தாக்கல் செய்தனர்.

இன்று காலை 11.45 மணியளவில் மன்னார் மாவட்ட டெலோ தலைமை அலுவலகத்தில் இருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வேட்பாளர்கள்,ஆதரவாளர்கள் ,நகர சபை, பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள்,வர்த்தகர்கள் என ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தனர்.

இதன் போது ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி வேட்பாளர்களை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து தந்தை செல்வாவின் சிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர். வேட்பாளர் வைத்தியர் ஞானசீலன் குனசீலன் தலைமையினான மூன்று வேட்பாளர்கள் மதியம் 12.05 மணியளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.


வேட்பு மனுத்தாக்கள் முடிவடைந்த நிலையில் குறித்த குழுவினர் மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை மற்றும், இந்து மத குரு ஐங்கர சர்மா ஆகியோரை நேரடியாக சென்று சந்தித்து ஆசி பெற்றனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் வைத்தியர் ஞானசீலன் குனசீலன்,எஸ்.சிவகரன் , சட்டத்தரணிகலான எஸ்.பிரிமூஸ் சிராய்வா,பி;.டெனிஸ்வரன்,ஜே.அனந்தன் குரூஸ்,கே.விமல சேகரம், இ.சால்ஸ், அயூப் அஸ்மி ஆகியோர் போட்டியிருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

 

புதுக்குடியிருப்பு பச்சைபுல் மோட்டையில் கண்ணிவெடிக்குப் பலியாகியிருக்கின்ற பத்து வயது சிறுமியின் மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். அதிர்ச்சி தருகின்ற இந்த சம்பவத்தைப் பத்தோடு பதினொன்றாக வெறுமனே புறந்தள்ளிவிட முடியாது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்
குறிப்பிடுகையில்,,,

இடம்பெயர்ந்த மக்களையெல்லாம் மீள்குடியேற்றம் செய்தாகிவிட்டது.மீள்குடியேறிய மக்கள்
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள்இ உதவிகளைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள்
 என்று அரசாங்கம் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில்தான் ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டையில் பத்து வயது பாலகி ஒருவர்
கண்ணிவெடிக்கு இலக்காகி உயிரிழந்திருக்கின்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கின்றது.
பூரணமாகக் கண்ணிவெடிகளை அகற்றாமல்,முறையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில்
மீள்குடியேற்றம் செய்யப்படுள்ள மக்கள் இன்று சொல்லொணாத் துயரங்களையும் கஷ்டங்களையும்
அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதன் விளைவாகவே,ஜோசப் நிக்கலஸ் நிஷாந்தினி என்ற பாலகி கண்ணிவெடிக்குப்
பலியாகியிருக்கின்றார்.

இந்தச் சம்பவத்தில் அருகில் வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டிருந்த அவரது 28 வயதுடைய
சகோதரியும படுகாயமடைந்திருக்கின்றார்.

இறுதி நேரத்தில் கடும் சண்டைகள் நடைபெற்ற பகுதிகளில் ஆனந்தபுரம் மிகவும் முக்கியமான
இடமாகும்.

பெருமளவிலான கண்ணிவெடிகளும் இனந்தெரியாத வெடிப்பொருட்களும் பரவிக்கிடக்கின்ற
 முக்கியமான இந்தப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு
முன்னர்,அரசாங்கம் சரியான முறையில் கண்ணிவெடிகளை அகற்றவில்லை.

 உடையாத அல்லது அரைகுறையாக உடைந்த வீடுகள், கிணற்றடி என்பவற்றைச் சுற்றிலும் மாத்திரம்
- சிறிய இடத்தில் கண்ணிவெடிகளை அகற்றிவிட்டு, அங்கு மக்கள் சென்று பாதுகாப்பாக வாழ
முடியும் என்று கூறி,அரசாங்கம் இறுதி நேர மீள்குடியேற்றத்தைச் செய்திருக்கின்றது.

இந்த நிலைமையில் தான்,முள்ளிவாய்க்கால் பகுதிகளில் ஷெல்லுக்கு பெற்றோரைப் பறிகொடுத்து
விட்டு மூத்த சகோதரனின் பராமரிப்பில் வாழ்ந்தசிறுமி நிஷாந்தினி கண்ணிவெடிக்குப்
பலியாகியிருக்கின்றார்.

ஏனோ தானோ என்று உப்புசப்பற்ற காரணங்களைக் காட்டிவிட்டுஇ இவருடைய மரணத்திற்குப் பொறுப்பு
கூறுவதிலிருந்து அரசாங்கம் தப்பிவிட முடியாது.

யுத்தத்தில் சிக்கி உறவுகளின் உயிர்களையும்இ உடைமைகளையும் இழந்து வெறுங்கையுடன்
வெளியேறி மனிக்பாம் முகாமுக்கு வந்த மக்கள் இன்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தாலும்,
இழப்புகளின் தாக்கத்தினால் வெந்து நொந்து போயிருக்கின்றார்கள்.

 அவர்களிடம் இழப்பதற்கென்று உயிரைத் தவிர வேறு எதுவுமே கிடையாது.

 அந்த உயிரையும் பறிக்கத்தக்க வகையில்தான் பூரணமாகக் கண்ணிவெடிகளை அகற்றி, சரியான
முறையில் பாதுகாப்பை உறுதி செய்யாத வகையில் மீள்குடியேற்றத்தை அரசாங்கம் செய்திருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மீள்குடியேற்றத்திற்காக,அரசாங்கம் கண்ணிவெடிகளை அகற்றி
ரூடிக்கட்டும் என்று மக்கள் மூன்று வருடங்களாகக் காத்திருந்தார்கள்.

இருந்தும், கண்ணிவெடிகளில் சிக்கி கால்கைகளை இழக்கவும், உயிர்களை இழக்கவும் வேண்டிய
அவலமான வாழ்வுக்குள்ளேயே இடம்பெயர்ந்த மக்களை  அரசாங்கம் தள்ளிவிட்டிருக்கின்றது.

பொறுப்புள்ள அரசாங்கம் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டிருக்கக் கூடாது.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில், நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு
செலவினத்திற்கென பெருந்தொகையான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வெறும் கையுடன் மீள்குடியேறியுள்ள மக்களின்
உடலுறுப்புக்களையும்,உயிர்களையும் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் மற்றும் வெடிப்பொருட்களில்
இருந்து பாதுகாப்பதற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் கணிசமான நிதியை
ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இன்னும் அகற்றப்படாமல் கோர யுத்தத்தின் எச்சங்களாகவும் சொச்சங்களாகவும்,வன்னிப்பிரதேசத்தில்
பரவிக்கிடக்கின்ற கண்ணிவெடிகள் மற்றும் வெடிப்பொருட்களினால் மேலும் ஓர் உயிரோ பல
உயிர்களோ காவு கொள்ளப்படாமல் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் முன்னெச்சரிக்கையோடு
செயற்பட முன்வர வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் எஸ்.வினேத நோகராதலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

http://www.newmannar.com/2012/10/mpvino.html#.UfZkfqfG3ek.facebook

Friday, 12 July 2013

தங்கத்தரை குட்டிமணி மற்றும் 53 விடுதலைப்போராளிகளை நினைவ கூருவோம் !!

எமது தலைவர்கள் தங்கத்தரை குட்டிமணி மற்றும் 53 விடுதலைப்போராளிகளை நினைவ கூருவோம் !!
Posted by TELOadmin on Sunday, June 30, 2013 · Leave a Comment 
Photo: தமிழீழ விடுதலை இயக்கம் (ஜேர்மனி)30வது தேசிய வீரர்கள் தினம் எமது தலைவர்கள் தங்கத்தரை குட்டிமணி மற்றும் 53 விடுதலைப்போராளிகளை நினைவ கூருவோம்
Posted by TELOadmin on Sunday, June 30, 2013 · Leave a Comment 
கறுப்பு யூலை 1983ம்ஆண்டு யூலை மாதம் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்ப்பட்ட எமது தலைவர்கள் தங்கத்தரை குட்டிமணி மற்றும் 53 விடுதலைப்போராளிகளை நினைவ கூருவோம்.

28ம்திகதி யூலைமாதம்  ஜேர்மனியில் ஜரோப்பிய ரெலோவினால் பொது அஞசலி நிகழ்வும் பொதுக் கூட்டமும் ஒழுங்கு செய்ப்பட்டுள்ளது.
இந்த நினைவு தினத்தில் விடுதலை போராளிகள் சமூகவியலாளர்கள் ஆர்வலர்கள் பொது மக்கள் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழீழ விடுதலை இயக்கம் (ஜேர்மனி)
அஞசலி நிகழ்வும் பொதுக் கூட்டமும்
இடம்:Escheln Str 98,47906 Kempen,Germany.
காலம் 28  யூலை 2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: பிற்பகல் 2.00 மணி www.telo.org
கறுப்பு யூலை 1983ம்ஆண்டு யூலை மாதம் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்ப்பட்ட எமது தலைவர்கள் தங்கத்தரை குட்டிமணி மற்றும் 53 விடுதலைப்போராளிகளை நினைவ கூருவோம்.

28ம்திகதி யூலைமாதம் ஜேர்மனியில் ஜரோப்பிய ரெலோவினால் பொது அஞசலி நிகழ்வும் பொதுக் கூட்டமும் ஒழுங்கு செய்ப்பட்டுள்ளது.
இந்த நினைவு தினத்தில் விடுதலை போராளிகள் சமூகவியலாளர்கள் ஆர்வலர்கள் பொது மக்கள் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழீழ விடுதலை இயக்கம் (ஜேர்மனி)

அஞசலி நிகழ்வும் பொதுக் கூட்டமும்

இடம்:  Escheln Str 98,47906 Kempen,Germany.
 
காலம் 28 யூலை 2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: பிற்பகல் 2.00 மணி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் !


கிழக்கு மாகாணசபை கலைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையினை ஆட்சியமைக்கும். அதற்குரிய காலம் மிகவிரைவில் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

பின்னர் வட, கிழக்கை நாங்கள்தான் ஆட்சி செய்வோம். மக்களின் அபிலாசைகளை துரிதகதியில் முன்னெடுப்போம். இதற்குரிய காலம் கனிந்துள்ளது என வன்னிமாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை கௌரவித்தலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் 80ஆவது அகவை பூர்த்தி விழாவும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற மாபெரும் சக்திக்கு வித்திட்டவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்கள். அவர் இக்கூட்டமைப்பு வலுப் பெறுவதற்கு அயராது உழைத்தவர். 5 கட்சிகள் ஒன்றிணைந்துதான் இக்கூட்டமைப்பு உருவாகியுள்ளது. மக்களை தேசிய ரீதியாக பலப்படுத்துவதற்கும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதற்கும் இக்கூட்டமைப்புக்குள் ஒற்றுமைதான் அவசியம்.

Photoதற்போது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு அகிம்சைப் போராட்டத்தினை கையிலெடுத்து சாத்வீக ரீதியில் செயற்பட்டு வருகின்றோம். தற்போது 5 தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு ஜனநாயகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதனூடாக செயற்பட்டு வருகின்றோம்.

கடந்த காலத்தில் நாம் ஆயுதப் போராட்டத்தினை மிகவும் சிறப்பாக முன்னெடுத்தபோது அரசாங்கம் கூறியது 13ஆவது திருத்தத்திற்கு மேலாக 13 பிளஸ் தருகின்றோம், ஆயுதங்களை கைவிடுங்கள் என்று. அரசாங்கத்தின் கருத்தினை நம்பி நாம் செயற்பட்டு ஆயுதங்களைக் கைவிட்டோம். பின்னர் 13ம் இல்லை பிளசுமில்லை. அரசு எம்மை ஏமாற்றிவிட்டு எம்மை அடக்கி ஒடுக்கியது.

அப்போது மேற்கொண்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படும் எனவும் எதிர்பார்த்தோம். அதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை.

ஒன்றுமையாக செயற்பட்டால்தான் கைச்சாத்திட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினையாவது அமுல்படுத்துவதற்கு அரசிற்கு அழுத்தங்களைக் மேற்கொள்ளலாம்.

தற்போது வட, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்களும் எமது இனத்தின் நிலங்களையும் சூறையாடிக் கொண்டு இருக்கின்றார்கள். அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை உண்டு பண்ணுகின்றார்கள்.

இந்தியா இப்பகுதிகளை ஆக்கிரமித்துவிடும் போன்ற காரணங்களை முன்வைத்து வடக்கில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் கண், காது, கால் போன்ற பல அங்கங்களை இழந்து சிறையில் வாடுகின்றார்கள். தினம் தினம் முள்ளிவாய்க்காலில் நடந்த சோகத்தினை நினைந்து நினைந்து சோகக் கண்ணீர் வடித்துக் கொண்டுதான் இன்னும் இன்னும் எம்மினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

இவையனைத்தினையும் எதிர்த்துப் போராடுவதற்று ஒன்றிணைந்துள்ள 5 தமிழ் கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். இந்தியாவிலே தமிழ்நாடு எம்பக்கம் உள்ளது. ஏனைய நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள எம்மக்கள் என்றும் உறுதுணையாகவுள்ளார்கள். அவர்களின் செயல்பாடுகளால் ஜனாதிபதி கூட அந்த நாடுகளுக்கு செல்ல முடியாதுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் ஈழத்திலே இருக்கின்ற எங்கள் மண்ணை நாம் மீட்பதற்காக ஒன்று படவேண்டும்.

இலங்கை அரசாங்கத்திற்கு வடமாகாணசபைத் தேர்தல் ஒரு சவாலாகும். இத்தேர்தல் நிச்சயமாக ஒரு திருப்பத்தினைக் கொண்டு வரும். வடமாகாண சபையினை நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும்.

அதுபோல் தற்போது கிழக்கு மாகாண சபையிலுள்ள ஆளும் கட்சியினருக்குள் பாரிய குழப்பங்கள் உருவாகியுள்ளன. நான் நிச்சயமாகக் கூறுகின்றேன் கிழக்கு மாகாணசபை கலைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையினை ஆட்சியமைக்கும். அதற்குரிய காலம் மிகவிரைவில் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

பின்னர் வட, கிழக்கை நாங்கள்தான் ஆட்சி செய்வோம். மக்களின் அபிலாசைகளை துரிதகதியில் முன்னெடுப்போம். இதற்குரிய காலம் கனிந்துள்ளது எனக் கூறினார்.
நண்றி !
 


 
டெலோ நியூஸ்