Pages

Wednesday, 6 March 2013

சுவிஸ் லுட்சேர்ன் மக்களோடு கலந்துரையாடவுள்ளது கூட்டமைப்பு

 
[ புதன்கிழமை, 06 மார்ச் 2013, 10:44.01 PM GMT ]
ஜெனீவா முன்றலில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள சென்ற கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாளை சுவிஸ் லுட்சேர்ன் மக்களை சந்தித்து அவர்களோடு கருத்தாடல் நடாத்தவுள்ளனர்.
லுட்சேர்ன் தமிழர் இந்து கலாச்சார மன்ற ஏற்பாட்டில் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் லுட்சேர்னில் உள்ள தமிழ் மக்களை நாளை சந்தித்து அவர்களோடு கலந்துரையாடவுள்ளனர்.
நாளை மாலை 6:00 மணியளவில் லுட்சேர்னில் உள்ள தமிழ் மன்றத்தில் இச்சந்திப்பு நடைபெறவிருக்கின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இக் கலந்துரையாடலில் பா.உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன் சிவஞானம் சிறிதரன், பா.அரியநேந்திரன், மாவை.சேனாதிராஜா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து தமிழ் உறவுகளையும் இச்சந்திப்பில் கலந்துகொண்டு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்கும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் கடந்த 3ம் திகதி சுவிஸ் துர்கா மாநிலத்திலும் குட்டமைப்பு உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்து கலந்துரையாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment