இந்தோனேசியாவில் காணாமல் போன ஈழத்தமிழர்கள் தொடர்பில் தகவல் தருமாறு உறவினர்கள் வேண்டுகோள்!
2009 ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. சில தினங்களுக்கு முன்பு ஈழத்தில் இருந்து குசலக் குமாரி என்ற தாய் இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தனது மகனை மீட்க தமிழகம் வந்துள்ளார் அதன் பின்பு பல அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்த வண்ணம் உள்ளது.
இது தொடர்பாக தமிழர் பண்பாட்டு நடுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு :
2009 ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.சில தினங்களுக்கு முன்பு ஈழத்தில் இருந்து குசலக் குமாரி என்ற தாய் இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தனது மகனை மீட்க தமிழகம் வந்துள்ளார் என்ற செய்தியை வெளியிட்டோம்.
அதன் பின்பு பல அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்த வண்ணம் உள்ளது. பலரும் தங்கள் உறவுகளை காணவில்லை, அண்ணனை காணவில்லை, தம்பியை காணவில்லை. இந்தோனேசியாவில் கடைசியாக அவனது குரலை கேட்டோம் என்று நமக்கு செய்தியை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
பல ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியா செல்லும் போது படகு மூழ்கி பலியாகி உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இந்தோனேசிய சிறைச்சாலையில் உள்ளனர். சிலர் திறந்தவெளி முகாமில் உள்ளனர்.
சிலர் இரண்டில் இருந்தும் தப்பித்து வெளியே அடையாளம் மறைத்து வாழ்ந்து வருகின்றனர். உலகெங்கும் இருக்கும் ஈழத் தமிழர்கள், தொலைந்து போன தங்கள் உறவை மீட்டுத் தாருங்கள் என நம்மிடம் கேட்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது. உலகில் நாடு இல்லாத தமிழரை மீட்க யார் தான் முன்வருவார்?
இந்தோனேசியாவில் உள்ள சில தமிழர்கள் அவ்வப்போது நமக்கு உதவ சில செய்திகளை சொல்கிறார்கள். எனினும் ஒருவரை கூட நம்மால் தொடர்பு
கொள்ள முடியவில்லை. தமிழினத்தை போல் இவ்வளவு வலியும் வேதனையும்
சுமந்த வேறு ஒரு இனம் இல்லை என்றே தோன்றுகிறது.
உண்மையில் நாடு கடந்த தமிழீழ அரசோ அல்லது தமிழ் அமைப்புகளோ இந்தோனேசியாவில் தான் அதிக வேலை பார்க்க வேண்டி உள்ளது. அங்குள்ள எல்லாத் தமிழர்களையும் மீட்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
அதற்கு அவர்கள் அங்கேயே சில காலம் ஒரு அலுவலகத்தை அமைத்தால் தமிழர்களை மீட்க பயனுள்ளதாக அமையும் என்று எண்ணுகிறோம். உலகில் பல்வேறு மூலையில் இருந்து தமிழர்கள் படங்களை அனுப்பி உள்ளனர்.
காணாமல் போனர்வர்களின் படங்களையும், இந்தோனேசியாவில் தரை
இறங்கிய தமிழர்களின் படங்களையும் இணைத்துள்ளோம். இவர்களைப் பற்றி
உங்களுக்கு ஏதாவது சிறு தகவல் தெரிந்தாலும் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்.
இவர்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது சிறு தகவல் தெரிந்தாலும் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்.
தமிழர் பண்பாட்டு நடுவம்
மின்னஞ்சல் : - tamilsculturalcentre@gmail.com
2009 ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. சில தினங்களுக்கு முன்பு ஈழத்தில் இருந்து குசலக் குமாரி என்ற தாய் இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தனது மகனை மீட்க தமிழகம் வந்துள்ளார் அதன் பின்பு பல அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்த வண்ணம் உள்ளது.
இது தொடர்பாக தமிழர் பண்பாட்டு நடுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு :2009 ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.சில தினங்களுக்கு முன்பு ஈழத்தில் இருந்து குசலக் குமாரி என்ற தாய் இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தனது மகனை மீட்க தமிழகம் வந்துள்ளார் என்ற செய்தியை வெளியிட்டோம்.
அதன் பின்பு பல அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்த வண்ணம் உள்ளது. பலரும் தங்கள் உறவுகளை காணவில்லை, அண்ணனை காணவில்லை, தம்பியை காணவில்லை. இந்தோனேசியாவில் கடைசியாக அவனது குரலை கேட்டோம் என்று நமக்கு செய்தியை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
பல ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியா செல்லும் போது படகு மூழ்கி பலியாகி உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இந்தோனேசிய சிறைச்சாலையில் உள்ளனர். சிலர் திறந்தவெளி முகாமில் உள்ளனர்.
சிலர் இரண்டில் இருந்தும் தப்பித்து வெளியே அடையாளம் மறைத்து வாழ்ந்து வருகின்றனர். உலகெங்கும் இருக்கும் ஈழத் தமிழர்கள், தொலைந்து போன தங்கள் உறவை மீட்டுத் தாருங்கள் என நம்மிடம் கேட்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது. உலகில் நாடு இல்லாத தமிழரை மீட்க யார் தான் முன்வருவார்?
இந்தோனேசியாவில் உள்ள சில தமிழர்கள் அவ்வப்போது நமக்கு உதவ சில செய்திகளை சொல்கிறார்கள். எனினும் ஒருவரை கூட நம்மால் தொடர்பு
கொள்ள முடியவில்லை. தமிழினத்தை போல் இவ்வளவு வலியும் வேதனையும்
சுமந்த வேறு ஒரு இனம் இல்லை என்றே தோன்றுகிறது.உண்மையில் நாடு கடந்த தமிழீழ அரசோ அல்லது தமிழ் அமைப்புகளோ இந்தோனேசியாவில் தான் அதிக வேலை பார்க்க வேண்டி உள்ளது. அங்குள்ள எல்லாத் தமிழர்களையும் மீட்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
அதற்கு அவர்கள் அங்கேயே சில காலம் ஒரு அலுவலகத்தை அமைத்தால் தமிழர்களை மீட்க பயனுள்ளதாக அமையும் என்று எண்ணுகிறோம். உலகில் பல்வேறு மூலையில் இருந்து தமிழர்கள் படங்களை அனுப்பி உள்ளனர்.
காணாமல் போனர்வர்களின் படங்களையும், இந்தோனேசியாவில் தரை
இறங்கிய தமிழர்களின் படங்களையும் இணைத்துள்ளோம். இவர்களைப் பற்றி
உங்களுக்கு ஏதாவது சிறு தகவல் தெரிந்தாலும் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்.இவர்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது சிறு தகவல் தெரிந்தாலும் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்.
தமிழர் பண்பாட்டு நடுவம்
மின்னஞ்சல் : - tamilsculturalcentre@gmail.com

