Tuesday, 4 June 2013

நாடு கடந்த தமிழீழ அரசோ அல்லது தமிழ் அமைப்புகளோ இந்தோனேசியாவில் தான் அதிக வேலை பார்க்க வேண்டி உள்ளது !!

இந்தோனேசியாவில் காணாமல் போன ஈழத்தமிழர்கள் தொடர்பில் தகவல் தருமாறு உறவினர்கள் வேண்டுகோள்!
2009 ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. சில தினங்களுக்கு முன்பு ஈழத்தில் இருந்து குசலக் குமாரி என்ற தாய் இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தனது மகனை மீட்க தமிழகம் வந்துள்ளார் அதன் பின்பு பல அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்த வண்ணம் உள்ளது.

Photoஇது தொடர்பாக தமிழர் பண்பாட்டு நடுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு :

2009 ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.சில தினங்களுக்கு முன்பு ஈழத்தில் இருந்து குசலக் குமாரி என்ற தாய் இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தனது மகனை மீட்க தமிழகம் வந்துள்ளார் என்ற செய்தியை வெளியிட்டோம்.

அதன் பின்பு பல அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்த வண்ணம் உள்ளது. பலரும் தங்கள் உறவுகளை காணவில்லை, அண்ணனை காணவில்லை, தம்பியை காணவில்லை. இந்தோனேசியாவில் கடைசியாக அவனது குரலை கேட்டோம் என்று நமக்கு செய்தியை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

பல ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியா செல்லும் போது படகு மூழ்கி பலியாகி உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இந்தோனேசிய சிறைச்சாலையில் உள்ளனர். சிலர் திறந்தவெளி முகாமில் உள்ளனர்.

சிலர் இரண்டில் இருந்தும் தப்பித்து வெளியே அடையாளம் மறைத்து வாழ்ந்து வருகின்றனர். உலகெங்கும் இருக்கும் ஈழத் தமிழர்கள், தொலைந்து போன தங்கள் உறவை மீட்டுத் தாருங்கள் என நம்மிடம் கேட்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது. உலகில் நாடு இல்லாத தமிழரை மீட்க யார் தான் முன்வருவார்?

இந்தோனேசியாவில் உள்ள சில தமிழர்கள் அவ்வப்போது நமக்கு உதவ சில செய்திகளை சொல்கிறார்கள். எனினும் ஒருவரை கூட நம்மால் தொடர்பு Photoகொள்ள முடியவில்லை. தமிழினத்தை போல் இவ்வளவு வலியும் வேதனையும் சுமந்த வேறு ஒரு இனம் இல்லை என்றே தோன்றுகிறது.

உண்மையில் நாடு கடந்த தமிழீழ அரசோ அல்லது தமிழ் அமைப்புகளோ இந்தோனேசியாவில் தான் அதிக வேலை பார்க்க வேண்டி உள்ளது. அங்குள்ள எல்லாத் தமிழர்களையும் மீட்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

அதற்கு அவர்கள் அங்கேயே சில காலம் ஒரு அலுவலகத்தை அமைத்தால் தமிழர்களை மீட்க பயனுள்ளதாக அமையும் என்று எண்ணுகிறோம். உலகில் பல்வேறு மூலையில் இருந்து தமிழர்கள் படங்களை அனுப்பி உள்ளனர்.

Photoகாணாமல் போனர்வர்களின் படங்களையும், இந்தோனேசியாவில் தரை இறங்கிய தமிழர்களின் படங்களையும் இணைத்துள்ளோம். இவர்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது சிறு தகவல் தெரிந்தாலும் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்.

இவர்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது சிறு தகவல் தெரிந்தாலும் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்.

தமிழர் பண்பாட்டு நடுவம்
மின்னஞ்சல் : -  tamilsculturalcentre@gmail.com 
 
Cell : - 9566224027
Tamilnadu.
 

தமிழர்களுக்கு என்று தனிக்கலாச்சாரம் உண்டு - விந்தன் கனகரத்தினம்

சட்டம் ஒழுங்கு என்பதற்கு அப்பால் தமிழர்களுக்கு என்று தனிக்கலாச்சாரம் உண்டு எனவே அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதன் போது யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் கலாச்சார சீர்கேடுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. அதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டம் ஒழுங்கு என்பதற்கு அப்பால் தமிழர்களுக்கு என்று தனிக்கலாச்சாரம் உண்டு எனவே அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதன் போது யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் கலாச்சார சீர்கேடுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. அதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டம் ஒழுங்கு என்பதற்கு அப்பால் வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு என்று தனிக் கலாச்சாரம் உண்டு. அதனைப் பாதுகாக்க எல்லோரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

சட்டத்தில் 18 வயதினைப் பூர்த்தி செய்து கொண்ட ஆண், பெண் இருவரும் தங்களுடைய விருப்பங்களுடன் வெளியிடங்களிலோ அல்லது விடுதிகளில் தங்கினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை.

எனினும் எமது கலாச்சாரத்தை நாம் மதிக்க வேண்டும். அதனை விடுத்து சட்டத்தின் அடிப்படையில் எமது கலாச்சாரத்தை தவறான முறையில் மாற்றக் கூடாது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக விடுதிகளில் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

அத்துடன் இதனை ஒரு தொழிலாக மேற்கொள்ள எமது கலாச்சாரத்தில் இடமில்லை. அத்துடன் யாழ்ப்பாணத்தில் குழு மோதல்கள், போதை வஸ்து பாவனை, மதுப்பாவனை அதிகரிப்பு, களவு, குற்றச்செயல்கள் மற்றும் தற்கொலை என்பன அதிகரித்து காணப்படுகின்றது. இவற்றை முற்றுமுழுதாக நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்
சட்டம் ஒழுங்கு என்பதற்கு அப்பால் வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு என்று தனிக் கலாச்சாரம் உண்டு. அதனைப் பாதுகாக்க எல்லோரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

சட்டத்தில் 18 வயதினைப் பூர்த்தி செய்து கொண்ட ஆண், பெண் இருவரும் தங்களுடைய விருப்பங்களுடன் வெளியிடங்களிலோ அல்லது விடுதிகளில் தங்கினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை.

எனினும் எமது கலாச்சாரத்தை நாம் மதிக்க வேண்டும். அதனை விடுத்து சட்டத்தின் அடிப்படையில் எமது கலாச்சாரத்தை தவறான முறையில் மாற்றக் கூடாது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக விடுதிகளில் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

அத்துடன் இதனை ஒரு தொழிலாக மேற்கொள்ள எமது கலாச்சாரத்தில் இடமில்லை. அத்துடன் யாழ்ப்பாணத்தில் குழு மோதல்கள், போதை வஸ்து பாவனை, மதுப்பாவனை அதிகரிப்பு, களவு, குற்றச்செயல்கள் மற்றும் தற்கொலை என்பன அதிகரித்து காணப்படுகின்றது. இவற்றை முற்றுமுழுதாக நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்
 

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை-இரா.சம்பந்தன்

இந்த நாட்டில் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை.

மக்களின் தீர்ப்பு அடிப்படையில் ஆட்சிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு அவர்கள் கருத்துக்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இதனை தெரிவித்தார்.


அண்மையில் திருகோணமலை சில்வஸ்டார் ஹோட்டலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் திருகோணமலை மாவட்ட வாக்காளர் பதிவும் வட்டாரப்பிரிப்பும் என்னும் பொருள் பற்றி பொது மக்களுடனும் புத்திஜீவிகளுடனும் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா. சம்பந்தன் இதனை தெரிவித்தார்.


மக்களுடைய ஜனநாயக உரிமையை பிரதிநிதித்துவப்படுத்துவது மக்களின் வாக்குகளாகும். வாக்கு மூலந்தான் ஆட்சியை அமைப்பது மக்கள் விருப்பம் எதுவொன்று அறிவது மக்களின் வாக்கு மூலந்தான்.


ஜனநாயகமென்பது மக்களின் இறைமையில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இறைமையின் முக்கியமான அம்சம் ஜனநாயகம்.

வடக்கில் கிழக்கில் வாழ்ந்து வந்த தமிழ்மக்கள் 1956ஆம் ஆண்டு முதல் தமது ஜனநாயக உரிமையை ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் குறிப்பிட்ட கொள்கையை அடிப்படையில் குறிப்பிட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அந்த கொள்கையை நிறைவேற்ற தமது வாக்குகளை அளித்து வந்துள்ளார்கள்.


கெளரவத்துடனும் சுயமரியாதையுடனும் தமது பிரதேசங்களில் வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் தான் மக்கள் தமது வாக்குகளை அளித்து வந்துள்ளார்கள்.
ஆனால் இந்நாட்டிலுள்ள முக்கியமான பிரச்சினையென்னவென்றால் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை.


இதன் காரணமாகவே ஆரம்பத்தில் சாத்வீகப் போராட்டம் நடாத்தப்பட்டது. அதன்பின்பு ஆயுதப் போராட்டம் நடாத்தப்பட்டது.


வாக்குரிமையொன்றின் மூலமே எமது இலக்கை அடைய முடியுமென்பதை புரிந்து கொள்ள வேண்டும். தற்பொழுது வட கிழக்கில் குடியிருக்கும் மக்களின் வாக்குகளை வாக்காளர் இடாப்பில் சேர்த்துக் கொள்ள முழுமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் அதற்கு மக்கள் கட்சி அதன் தொண்டர்கள் கூடிய பங்களிப்புச் செய்யவேண்டும்.


தற்பொழுது தத்தமது சொந்த இடங்களில் குடியிருக்கும் மக்களிடம் மக்களைப் பதியக்கூடிய விதத்தில் எல்லோரும் செயற்பட வேண்டும். சில இடங்களில் மக்கள் வாழாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் தமது சொந்த இடங்களில் வாக்கைப் பதிவு செய்ய வாக்களிக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும.


முன்பு வட கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்த மக்களை அவர்கள் முன்பு வாழ்ந்த இடங்களில் வாக்காளராக பதிவு செய்வதற்குரிய சட்டம அடுத்த மாதம் பாராளுமன்றம் கூடுகிற போது இது பற்றிய சட்டம் கொண்டு வரப்படலாம். விசேடமாக வட மாகாண தேர்தலை மையமாக வைத்து சட்டம் கொண்டு வரப்படவிருக்கின்றது.


இதற்குரிய காரணம் என்னவென்றால் வட மாகாணத்திலிருந்து தமிழர்கள் அல்லாதவர்கள் குடிபெயர்ந்திருக்கிறார்கள் அவர்கள் இப்பொழுது வேறுமாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள் ஒரு காலத்தில் வட மாகாணத்தில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தவர்கள் வட மாகாணத்தில் வாழ்ந்தவர்கள் தற்பொழுது வடமாகாணத்தில் பதிவு செய்யும் வகையில் அச்சட்டம் கொண்டு வரப்படவிருக்கின்றது


அவர்கள் அவ்வாறு வடமாகாணத்தில் வாக்களிக்க விரும்பினால் அந்த உரிமையை நாங்கள் மதிக்க வேண்டும். ஆனால் அவர் அதேசமயம் வேறு மாவட்டத்தில் பதிவு செய்யமுடியாது.

என்னவென்றால் எந்தவொரு பிரஜைக்கும் இரண்டு வாக்குரிமை இருக்கமுடியாது


பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிபெயர்ந்து தமிழ் நாட்டிலுள்ள அகதி முகாம்களில் வாழந்து வருகின்றார்கள் பிறமாவட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

அவர்களும் வடமாகாணத்தில் வாழ்ந்தவர்கள் அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. இதனை பரிசீலிக்கப்படவேண்டும் என்றும் சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

Posted by on Sunday, June 2, 2013 · Leave a Comment