Thursday, 29 November 2012

தமிழ் ஈழ விடுதலை இயக்க தொடர்புகள் Head Office Email: contact@telo.org Telephone: + 94 (0) 24 222 2977 Address: 14, Vairavar Kovil Veethy,10th Lane,Vairavappuliyankulam Vavuniya Sri Lanka Telo Batticalo District Head Office Telo Mannar Office London Branch Contacts Srisabaratnam road Batticalo Sri Lanka TP: +94 (0)65 2227063 Janna EX MP TP:+94776322335 Presena:+94777444995 Telo Amparai Office Kentrei TP:+94778365364 Telo Trincomali Office Ranka:+94774929306 Nesan:+94778153818 Nanthan master:+94779521827 Nithi Master:+94776911948 France Branch Contacts Nithi:+33164672533 Logan:+33646767830 Kulan:+33699656050 Canada Branch Contacts Tronto Kiruba:411230687 shankiru@hotmail.com Montreal Bava(Rasan) TP:5418297326 TP;6072078889 St.Sebastian Road Mannar Sri LankaTP: +44 (0) 23 2232100 Telo Mullaithivu Office Vino Nokarathalingam MP TP:+94716913069 Telo Jaffna Office Mr.N.K.Srikantha EX MP ,TP:+94750720030 K.N.Vinthan JP, MMC of Jaffna,TP:+94773545186 Switzerland Branch Contacts Selva:+41794037783 Vasee:+41793399316 Paandy:+41763228905 Segar:+783057684 USA Branch Contacts Baskaran:+15516890545 antonseeman@yahoo.com Italy Branch Contacts Lawrence:+393397799739 Norway Branch Contacts Nisanthan:+4799856542 Sam: 07956 518917 sampanthan@btinternet.com Pari: 07956 313181 Ilanko: Suthan Charls: Rasa: Ruban: Iyar: Peter: Singam: Rathan: Makesh: Bairavan: 07445359418 07939578792 07968525563 07956280331 07752079379 07868486672 07807910162 07949898974 07779611001 07940094596 07735329925
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்: செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கண்டனம்
யாழ். பல்கலைக்கழக விடுதியினுள் கடந்த 27 ஆம் திகதி இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தமை மற்றும் மறுநாள் காலை மாணவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் ஆகியவற்றை த.தே. கூட்டமைப்பு வண்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத் (ரெலோ)தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதன் ஒரு அங்கமாகவே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவமும் அமைந்துள்ளது.கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினமன்று யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியினுள் அத்துமீறி நுழைந்த ஆயிரக்கணக்காண இராணுவத்தினரும், பொலிஸாரும் அங்கு மாணவர் விடுதியினை சேதப்படுத்தியதோடு மாணவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் அந்த மாணவர்களுக்காக ஆதரவு தெரிவித்து அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சரவனபவன் அவர்களை கற்கலினால் எறிந்து தாக்க முயற்சித்ததோடு, ஊடகவியலாளர் ரீ.பிரேமானந்த மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து மறு நாள் 28 ஆம் திகதி காலை இராணுவத்தினரதும், பொலிஸாரதும் குறித்த சம்பவத்தை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கணக்காணவர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது அந்த மாணவர்கள் மீது இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கண்மூடித்தனமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் போது பல மாணவர்கள் காயமடைந்து யாழ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களின் வாகனம் அங்கு இராணுவத்தினருக்கு முன்னால் வைத்து சந்தேகநபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவங்களுக்கு இராணுவம் ஆதரவாக காணப்பட்டுள்ளது.பல்கலைக்கழக மாணவர்களை அடக்கி ஆள நினைக்கும் படையினர் இவ்வாறான கலவரங்களை ஆரம்பித்து பழி தீர்க்க முனைகின்றனர். குறித்த சம்பவங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வண்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றது.இந்த சம்பவத்திற்கு எதிராக சர்வதேசத்தின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்து நிற்பதோடு, இந்த சம்பவத்திற்கு எதிராக சில தினங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போரினால் இடப்பெயர்வுகளை சந்தித்த மக்கள் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை! பிரசன்னா
போர் ஓய்ந்தாலும் யுத்த காலத்திலும் இன வன்முறைகளினாலும் எல்லைப் புறங்களிலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்களின் காணிகள் மற்றும் வீடுகள் தொடர்ந்தும் கைவிடப்பட்டிருப்பது எதிர்காலத்தில் காணிகளையும் கட்டடங்களையும் இழக்க நேரிடும் அபாயம் ஏற்படலாம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத் (ரெலோ)தின் பிரசன்னா இந்திரகுமார் அச்சம் வெளியிட்டுள்ளார்.மட்டக்களப்பு மாநகரசபை – 19 ஆம் வட்டாரம் மஞ்சந்தொடுவாய் கிராமத்திற்கு விஜயம் செய்த அவர் ஆலய முன்றலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் அங்கு தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தமிழ் மக்கள் யுத்தம், இன வன்முறைகள் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தம் என மூன்று கட்டங்களில் இடம்பெயர்வுகளைச் சந்திதார்கள்.இந்த இடப்பெயர்வுகளைச் சந்தித்த மக்களின் நிலை இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையே காணப்படுகிறது.கரையோரப் பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்கையில் வெளிநாடுகளின் உதவியுடன் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் யுத்தம் மற்றும் இன வன்முறைகளினால் இடம்பெயர்ந்த மக்களின் இயல்பு வாழ்கையில் இன்னமும் முன்னேற்றம் காணப்படாத நிலையே காணப்படுகின்றது.எமது மாவட்டத்தைப் பொறுத்தவரை படுவான்கரை பிரதேசமும் எழுவான்கரையில் சில பிரதேசங்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டன.எழுவான்கரையில் வாழைச்சேனை, தியாவட்டுவான், ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஆரையம்பதி, மஞ்சந்தொடுவாய் போன்ற எல்லைக் கிராமங்கள் இன வன்முறைகளுக்கு பலியாகியதன் காரணமாக அந்த கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.அப்படி வெளியேறிய குடும்பங்களில் ஒரு பகுதியினர் இன்னமும் மீளத் திரும்பாததன் காரணமாக அவர்களது வீடுகளும் காணிகளும் தொடர்ந்தும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.சிலர் அன்றைய அச்சநிலை காரணமாக பிற இனத்தவருக்கு தமது காணிகளை விற்பனை செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.அன்றைய சூழ்நிலை காரணமாக அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். இனிமேல் இவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படாதவாறு தமிழ் மக்கள் தமது காணிகளைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.எல்லைப்புற ஏனைய சமூகங்களோடும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப வேண்டும்.இன வன்முறை காரணமாக சில தமிழ் கிராமங்களில் தமிழர்களே வாழ்ந்த அடையாளங்கள் இல்லாமல் போய்விட்டன.என்றாலும் மஞ்சந்தொடுவாய் கிராம மக்கள் தங்களுடைய காணிகளைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருப்பது வரவேற்கத்தக்கது. இதில் தொடர்ந்தும் உறுதியுடன் இருக்கவேண்டும்.தற்போது இனப் பிரச்சினை தொடர்பில் சிலர் இங்கு கருத்து வெளியிட்டார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் பலம் ஒன்றுதான் அவர்களுக்குரிய பலம்.திவிநெகும சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்குரிய அதிகாரத்தைப் பறிப்பதற்கு திட்டமிட்டுள்ள அரசாங்கம், 13 வது அரசியல் யாப்பு திருத்தத்தை ரத்து செய்வதன் மூலம் மாகாண சபை முறைமையை ஒழிக்க முற்படுகிறது.13 வது அரசியல் யாப்பு திருத்தத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கவில்லை. ஆனால் அதில் உள்ளடக்கப்பட்ட வடக்கு – கிழக்கு உட்பட அதிகாரங்கள் அனைத்தும் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.