Wednesday, 16 October 2013

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை!- சிவாஜிலிங்கம்!

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் எங்களுக்கு அறவே நம்பிக்கை இல்லை என வடமாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியற்துறை தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று (14) மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.

Tuesday, 15 October 2013

முல்லைதீவில் பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் டெலோ அமைச்சர் டெனிஸ்வரன் சந்திப்பு !

முல்லைத்தீவில் நேற்று (12) இடம்பெற்ற திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களை, வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கைத்தொழில், வர்த்தகம், வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் டெலோவின் பா.டெனிஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் இன்று (13) காலை சந்தித்துள்ளார்.


இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், டெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் ஆகியோரும் சென்றிருந்தனர்.


இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் மீனவ பிரதிநிதிகளுடன் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடினர். இதன்போது மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அவர்களிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அனர்த்தம் இடம்பெற்ற கடற்கரை பகுதிக்குச் சென்று சேதமடைந்த படகுகளை பார்வையிட்டனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மீனவர்களையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குரிய நஸ்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் உறுதியளித்தார்.