Thursday, 29 November 2012
போரினால் இடப்பெயர்வுகளை சந்தித்த மக்கள் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை! பிரசன்னா
போர் ஓய்ந்தாலும் யுத்த காலத்திலும் இன வன்முறைகளினாலும் எல்லைப் புறங்களிலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்களின் காணிகள் மற்றும் வீடுகள் தொடர்ந்தும் கைவிடப்பட்டிருப்பது எதிர்காலத்தில் காணிகளையும் கட்டடங்களையும் இழக்க நேரிடும் அபாயம் ஏற்படலாம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத் (ரெலோ)தின் பிரசன்னா இந்திரகுமார் அச்சம் வெளியிட்டுள்ளார்.மட்டக்களப்பு மாநகரசபை – 19 ஆம் வட்டாரம் மஞ்சந்தொடுவாய் கிராமத்திற்கு விஜயம் செய்த அவர் ஆலய முன்றலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் அங்கு தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் யுத்தம், இன வன்முறைகள் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தம் என மூன்று கட்டங்களில் இடம்பெயர்வுகளைச் சந்திதார்கள்.இந்த இடப்பெயர்வுகளைச் சந்தித்த மக்களின் நிலை இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையே காணப்படுகிறது.கரையோரப் பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்கையில் வெளிநாடுகளின் உதவியுடன் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் யுத்தம் மற்றும் இன வன்முறைகளினால் இடம்பெயர்ந்த மக்களின் இயல்பு வாழ்கையில் இன்னமும் முன்னேற்றம் காணப்படாத நிலையே காணப்படுகின்றது.எமது மாவட்டத்தைப் பொறுத்தவரை படுவான்கரை பிரதேசமும் எழுவான்கரையில் சில பிரதேசங்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டன.எழுவான்கரையில் வாழைச்சேனை, தியாவட்டுவான், ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஆரையம்பதி, மஞ்சந்தொடுவாய் போன்ற எல்லைக் கிராமங்கள் இன வன்முறைகளுக்கு பலியாகியதன் காரணமாக அந்த கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.அப்படி வெளியேறிய குடும்பங்களில் ஒரு பகுதியினர் இன்னமும் மீளத் திரும்பாததன் காரணமாக அவர்களது வீடுகளும் காணிகளும் தொடர்ந்தும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.சிலர் அன்றைய அச்சநிலை காரணமாக பிற இனத்தவருக்கு தமது காணிகளை விற்பனை செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.அன்றைய சூழ்நிலை காரணமாக அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். இனிமேல் இவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படாதவாறு தமிழ் மக்கள் தமது காணிகளைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.எல்லைப்புற ஏனைய சமூகங்களோடும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப வேண்டும்.இன வன்முறை காரணமாக சில தமிழ் கிராமங்களில் தமிழர்களே வாழ்ந்த அடையாளங்கள் இல்லாமல் போய்விட்டன.என்றாலும் மஞ்சந்தொடுவாய் கிராம மக்கள் தங்களுடைய காணிகளைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருப்பது வரவேற்கத்தக்கது. இதில் தொடர்ந்தும் உறுதியுடன் இருக்கவேண்டும்.தற்போது இனப் பிரச்சினை தொடர்பில் சிலர் இங்கு கருத்து வெளியிட்டார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் பலம் ஒன்றுதான் அவர்களுக்குரிய பலம்.திவிநெகும சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்குரிய அதிகாரத்தைப் பறிப்பதற்கு திட்டமிட்டுள்ள அரசாங்கம், 13 வது அரசியல் யாப்பு திருத்தத்தை ரத்து செய்வதன் மூலம் மாகாண சபை முறைமையை ஒழிக்க முற்படுகிறது.13 வது அரசியல் யாப்பு திருத்தத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கவில்லை. ஆனால் அதில் உள்ளடக்கப்பட்ட வடக்கு – கிழக்கு உட்பட அதிகாரங்கள் அனைத்தும் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment