Friday, 27 April 2012

ExTELO : உங்கள் (FILE)பைல்களை மற்றவர்களிடமிருந்து நிமிடத்தில் மறைக்க - பயனுள்ள வசதி !





நமக்கு தேவையான பைல்களை எந்த சாப்ட்வேர் துணையும் இல்லாமல் மற்றவர்களிடமிருந்து மறைத்து வைக்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


கீழே இருக்கும் இந்த கோடை(Code) காபி செய்து Notepadயில்      .bat என்று முடியும்படி சேமித்து வைத்து கொள்ளுங்கள். நான் tamil.bat என்று சேமித்து வைத்துள்ளேன்.



கீழே இருக்கும் கோடில் சிகப்பு நிறத்தில் இருக்கும் பகுதியில் உங்களுக்கு தேவையான PASSWORD தந்து சேமித்து கொள்ளுங்கள்.


@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto
UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo stuff by satish
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==TYPE UR PASSWORD HERE goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder
Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
End

சேமித்தவுடன்  கீழே படத்தில் உள்ளது போல் ஒரு ஐகான் வந்திருக்கும்.
அதனை டபுள் கிளிக் செய்தால் ஒரு LOCKER FOLDER வரும்.
உங்களுக்கு தேவையான பைல்களை அதாவது நீங்கள் மறைக்க நினைத்த பைல்களை இந்த LOCKER FOLDER போல்டெருக்குள் SAVE செய்து வைத்து கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் NOTEPAD ஐகானை டபுள் கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போல வரும். அதற்கு Y(YES) கிளிக் செய்தால் உங்கள் போல்டெர் மறைந்து விடும்.
பின்னர் உங்களுக்கு தேவையான சமயத்தில் NOTEPAD ஐகானை கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போல் ஒரு POPUP WINDOW வரும்.அங்கு நீங்கள் தந்த PASSWORDடை தந்தால் உங்கள் LOCKER FOLDER திரும்ப வந்து விடும்.



எளிதாக நீங்கள் பாதுகாக்க நினைத்த பைல்களை இதன் மூலம் மற்றவர்களிடமிருந்து மறைத்து வைத்து கொள்ளலாம்.
** நீங்கள் PASSWORD தரவில்லை என்றால் PASSWORD கேட்கும் இடத்தில UNLOCK என்று TYPE செய்தால் திரும்ப LOCKER FOLDER வந்துவிடும் .
 
நண்றி !
April 27, 2012 
 
 

Ex TELO : முன்னாள் அமைச்சர் இராஜதுரைக்கு கறுப்பு கொடி காட்டி சிவாஜிலிங்கம் எதிர்ப்பு !

வீரகேசரி தேசிய நாளேடு 4/27/2012 10:54:36 AM

  யாழ்ப்பாணத்தில் மூதறிஞர் தந்தை செல்வாவின் நினைவு தினக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எம்.கே. சிவாஜிலிங்கம் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்புக்காட்டிய சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது.

யாழிலுள்ள தந்தை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில் இந்த நினைவு தின வைபவம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிவாஜிலிங்கம் தனது கறுப்புக் கொடி எதிர்ப்பின் போது தமிழ் தேசிய துரோகி இராஜதுரையை வெளியேற்று எனவும் மட்டக்களப்பு துரோகி அரசின் அடிவருடி துரோகியை வெளியேற்ற வேண்டும் என கோரினார்.

இதன் போது தந்தை செல்வாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நினைவுக் கூட்டத்திலிருந்து வெளியேறிய சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது,

முன்னாள் அமைச்சராக இருந்த இராஜதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு அரசில் இணைந்து அமைச்சரானார். பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஆதரவளித்து தமிழ் இளைஞர்களை சிறையில் தள்ளியவர். இந்த புனிதமான மண்ணில் இவரை கால் வைக்க விடமாட்டேன் என்றார்.

எவ்வாறாயினும் சற்று நேரத்திற்கு பின்னர் தந்தை செல்வநாயகத்தின் நினைவுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் செல்லையா இராஜதுரை உரையாற்றும் போது,

""தந்தை செல்வா ஒரு அரசியல் பாடப் புத்தகம் அவர் தமிழ் மக்கள் பிரிந்து வாழ்வதை விரும்பாத ஒருவர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்து விட்ட காலத்தால் அழிக்க முடியாத ஒருவர்'' என்றார்.

இந்நிலையில் தந்தை செல்வாவின் புதல்வர் சத்தியதாசன் மற்றும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் அடிகளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
___
1


Thursday, 26 April 2012

Ex TELO : முஸ்லீம்கள் உட்பட, அந்நிய மதங்கள் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது: தேரர்


April 25, 2012

பௌத்த காணிகளையும் உரிமைகளையும் அந்நிய மதங்கள் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது இலங்கையில் பௌத்தர்களே பெரும்பான்மை இனத்தவர்கள் என்பதை இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல் பே சோபித தேரர் தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கைக்குள் புகுத்திய பல்கழக கொள்கைகளினாலேயே இலங்கையில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் அரசியலமர்வில் பௌத்தர்களுக்கு உள்ள தனித்துவத்தை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத வேற்றுமை குறித்து எமக்கு யாரும் கற்பிக்க தேவையில்லை. எனவே பௌத்த புனித பூமிக்குள் அத்து மீறி இருக்கும் ஏனைய மதஸ்தலங்கள் அகற்றப்பட வேண்டும். அரசியல்வாதிகள் சுய நலத்துடன் செயற்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய நூலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல் பே சோபித தேரர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் தம்புள்ளையில் சர்ச்சைக்குரிய முஸ்லிம் வழிபாட்டுத் தலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணமே உள்ளது. 2300 க்கும் அதிகமான வரலாற்றைக் கொண்ட சிங்கள பௌத்தத்திற்கு எவ்வாறு சக அந்நிய மதங்களுடன் வாழ வேண்டும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதல்ல.
தம்புள்ள பூமி பௌத்தர்களின் பாரம்பரிய புனித பூமியாகும். இங்கே வியாபார நோக்கத்திற்காக வந்த முஸ்லிம் இனத்தவர்கள் மிகவும் சூழ்ச்சிகரமாக ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு நிலை கொண்டனர். பௌத்த பூமியில் தார்மீக உரிமையற்ற வகையில் மேற்படி வழிபாட்டு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைச் சட்டத்திற்கும் முரணானதாகும்.
முஸ்லிம் வழிபாட்டு நிலையத்தை அமைக்க அரசியல் தலைவர்களும் உதவிகளை வழங்கியுள்ளனர். அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற நிலைப்பாடு காணப்பட வேண்டுமாயின் தம்புள்ள முஸ்லிம் வழிபாட்டு தலம் அகற்றப்பட வேண்டும். சர்வதேச சூழ்ச்சிகளுக்குள் இலங்கை சிறைப்பட்டு இருக்கையில் இவ்வாறான மதச் சண்டைகளை சூத்திரதாரிகள் ஏற்படுத்தலாம். எனவே ஜனாதிபதி இரு கண் கொண்டல்ல ஆயிரம் கண்களைக் கொண்டு பிரச்சினைகளை ஆராய வேண்டும் எனக் கூறினார்.
உதய கம்பன் பில
இதன் போது உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிச் செயலாளரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்பன் பில கூறுகையில்,
தம்புள்ளையில் அமையப் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய முஸ்லிம் வழிபாட்டுத் தலம் 1962 ஆம் ஆண்டு தொடக்கம் அவ்விடத்தில் காணப்படுவது என்பது போலியான தகவல்களாகும். நேரடியாகவே சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்து பேசிய பின்னரே இது தெரிய வந்தது. எனவே ஜெனீவாவில் இலங்கைக்கு முஸ்லிம் நாடுகள் உதவி செய்தன. உண்மை தான். இதற்கு நன்றி கூறியுள்ளோம். ஆனால் சர்வதேச அழுத்தங்களை காரணமாகக் கொண்டு பௌத்த உரிமைகளை அழிக்க முற்படுவதை அனுமதிக்க முடியாது.
அசாத் சாலி மற்றும் ஆளுநர் அலவி மௌலானா அமைச்சர் ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் உண்மைகளை அறிந்து பேச வேண்டும் எனக்கூறினார். நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க
இங்கு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறுகையில்,
பௌத்த காணிகளை அந்நிய மதத்தவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றனர். இதனை சிங்கள தலைமைத்துவங்கள் உரிய வகையில் புரிந்து கொள்ளாததனாலேயே தேவையற்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் உள்நாட்டில் பல் சமூக கொள்கைகள் விஸ்தரிக்கப்பட்டன. இதனால் பௌத்தர்களின் உரிமைகளும் தனித்துவமும் மெது மெதுவாக ஏனைய மதத்தவர்களால் அழிக்கப்பட்டது. இதனை தொடர அனுமதிக்க முடியாது.
இலங்கையில் பௌத்தர்கள் பெரும்பான்மையானவர்கள் என்பதையும் அரசியலமைப்பில் காணப்படும் சிறப்புரிமைகளையும் ஏனைய மதத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானில் பௌத்த சிலை உடைக்கப்பட்டபோது எவ்விதமான எதிர்ப்பையும் வெளிப்படுத்தாத முஸ்லிம் தலைவர்கள் தம்புள்ளயில் அமைக்கப்பட்ட சட்ட விரோத கட்டிடம் தொடர்பாக பேசுவதில் அர்த்தமில்லை என்றார்.

Ex TELO : கிழக்கிலங்கையில் முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 ஏப்ரல், 2012 - 09:55 ஜிஎம்டி


இலங்கையில் மாத்தளை மாவட்டத்திலுள்ள தம்புள்ளை நகரில் பள்ளிவாசல் ஒன்றின் மீது பௌத்த பிக்குமார் உட்பட சிலரால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும், குறித்த பள்ளிவாசலை வேறிடத்துக்கு இடமாற்றம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிரப்பு தெரிவித்தும் இன்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் முழு நாள் கடையடைப்பு (ஹர்த்தால்) அனுஸ்டிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் அரச, தனியார் காரியாலயங்கள் ஊழியர்கள் வரவின்மையாலும், பாடசாலைகள் மாணவர் வரவின்மையாலும் இயங்கவில்லை.
சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு உள்ளுர் போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன. இதன் காரணமாக இப்பிரதேசங்களில் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுளளது.
காலையில் வீதிகளின் குறக்கே மரக் குற்றிகளைப் போட்டும், டயர்களை எரித்தும் போக்குவரத்து தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் பொலிசாரும், பாதுகாப்புத் தரப்பினரும் விரைந்து அதனை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.


வீதிகளிலும் பொது இடங்களிலும் கூட்டமாகக் காணப்பட்டவர்களை பாதுகாப்பு தரப்பினர் விரட்ட முற்பட்ட போது சில இடங்களில் இரு சாராருக்குமிடையில் முறுகல் நிலை காணப்பட்டதாக உள்ளுர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய ஹர்த்தாலுக்கான அழைப்பு அம்பாறை மாவட்ட இஸ்லாமிய இளைஞர் சம்மேளனம் எனக் குறிப்பிட்டு துண்டு பிரசுரம் மூலம் விடுக்கப்பட்டதாகவும், இந்த அறிவித்தல் பள்ளிவாசல் ஒலி பெருக்கிகளிலும் அறிவிக்கப்பட்டதாகவும் உள்ளுர் மக்களின் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
நேற்று இரவு முதல் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் வழமை நாட்களை விட மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கிழக்கு பிராந்திய இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா அந்த பகுதிக்கு விஜயம் செய்து நேற்று மாலை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் உலமா சபை பிரதிநிதிகள் கலந்து கொண்ட சந்திப்பொன்றையும் மேற்கொண்டு தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளித்திருந்தார்.

காத்தான்குடியிலும் ஹர்த்தால்
எரிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன அலுவலகம்

எரிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன அலுவலகம்
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்திலும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. அந்த பிரதேசத்திலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் அலுவலகம் முன்பக்க பிரதான வாசலில் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் மரப் பலகைளை குவித்து தீ வைத்த போதிலும் அவ்வழியாகச் சென்ற பாதுகாப்பு தரப்பினரால் தீ அணைக்கப்பட்டதாக சம்மேளனத் தலைவர் எம்.ஐ.எம் சுபைர் கூறுகின்றார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தங்களால் அடையாளம் காணப்படவில்லை எனக் கூறும் அவர், தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் அகில இலங்கை உலமா சபையின் தீர்மானத்திற்கு ஏற்ப செயற்பட தாம் முடிவெடுத்ததன் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தாம் கருதுவதாகவும் கூறுகின்றார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/04/120426_amparaishutdown.shtml

Ex TELO: திருக்கேதீஸ்வர ஆலயச் சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் செயற்பாடுகள் - Virakesari Online

 - Virakesari Online

வீரகேசரி இணையம் 4/26/2012 11:40:36 AM
  பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலயச்சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ ஆதரவால் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை கண்டிப்பதாக அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து மாமன்றத்தின் தலைவர் வி. கயிலாசப்பிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கை யொன்றிலேயே இந்தக் கண்டனம் வெளியிடப்பபட்டுள்ளது.

இந்து மக்களின் சுதந்திரத்தைப் பாதிக்கின்ற எந்தவொரு முயற்சியையும் பொறுக்க முடியாது, ~மதத் துவேஷ நிகழ்வுகளுக்கு இந்து மாமன்றம் கண்டனம்| எனும் தலைப்பிலான அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்றைய தமிழ்த்; தினசரி ஒன்றில் ~பிள்ளையார் கோவிலை அகற்ற உத்தரவு - திருமலையில் தமிழர்கள் கொந்தளிப்பு| எனும் தலைப்பில் பிரசுரமான செய்தி கண்டு அதிர்ச்சியும் மன வேதனையும் அடைகின்றோம். 60 வருடகால பெருமைவாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை அகற்றுமாறு அரசாங்கமோ, எந்த ஓர் அதிகார சபையோ உத்தரவு பிறப்பிக்க இந்நாட்டின் சட்டமோ அல்லது எந்த நீதி நியாயமோ இடம் தரவில்லை. தம்புள்ளையில் இருக்கும் இந்து ஆலயத்தை அகற்ற வேண்டும் என்ற கோஷம் சம்பந்தமான செய்தியறிந்ததும் வேதனை அடைகிறோம். பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலயச் சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ ஆதரவால் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை அறிந்தும் கவலையடைகின்றோம், கண்டிக்கிறோம்.

இந்த நாட்டில் சம உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழும் உரிமை இந்து மக்களுக்குண்டு. இந்தச் சுதந்திரத்தை பறிகொடுக்க இந்த நாட்டின் எந்தவோர் இந்துவும் தயாரில்லை. இந்து மக்களின் சுதந்திரத்தைப் பாதிக்கின்ற எந்தவொரு முயற்சியையும் பொறுக்க முடியாது.

இந்த நாட்டின் மக்கள் அனைவரது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்திருக்கின்ற ஜனாதிபதியோ அவரின் அமைச்சர்களோ, அமைச்சின் செயலாளர்களோ இப்படியான மதத் துவேஷ நடவடிக்கைகளுக்கு கட்டளை பிறப்பித்திருப்பார்களென்று எம்மால் நம்ப முடியாது.

உடனடியாக இந்தத் துவேஷ நடவடிக்கைகளை நிறுத்துமாறு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம். மேலும், இதில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சகல தமிழ் அரசியல் தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
___

Wednesday, 25 April 2012

Ex TELO: தீர்வை முன்வைத்திருந்தால் இந்தியாவிடமோ உலக நாடுகளிடமோ தாம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது:செல்வம் அடைக்கலநாதன் !


தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றைக்கான எந்தெந்த வழிகளைக் கையாள முடியுமோ அத்தனை வழியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளுமெனத் தெரிவித்த அக்கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கம் தீர்வை முன்வைத்திருந்தால் இந்தியாவிடமோ உலக நாடுகளிடமோ தாம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்றும் கூறினார். பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவிடமும் ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் சென்று எடுத்துரைப்பதில் எவ்விதமான பிரயோசனமுமில்லையென அமைச்சரவை பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்ததுடன் கூட்டமைப்பு என்னதான் நச்சரித்தாலும் தீர்வு இங்குமட்டுமே இருக்கின்றதெனவும் அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் மகா நாட்டில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார் இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது;
தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் ஒரு வருடகாலம் நடைபெற்ற பேச்சில் எந்தவொரு விடயத்திலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இவ்வாறான நிலையிலேயே தீர்வு காண்பதற்கு அறிந்த இடம் தெரிவுக்குழுவெனவும் இதில் பங்குபற்றுமாறு கூட்டமைப்புக்கு அரசாங்கம் கூறிவருகின்றது. முன்னர் 13 ஆம் அரசியல் திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வை வழங்குவதாகக் கூறிய அரசாங்கம் இன்று தெரிவுக்குழுவில் இடம்பெறுவதன் மூலமே 13 பிளஸா அல்லது மைனஸா என்பது குறித்து ஆராய்ந்து தீர்வொன்றுக்கு செல்ல முடியுமென இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் தெரிவித்துள்ளோமெனக் கூறுகின்றது. அரசாங்கம் தீர்வை முன்வைக்காது காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாட்டிலேயே இருக்கின்ற நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற நாம் உலகநாடுகளிடம் செல்ல வேண்டியேற்பட்டுள்ளது. அரசாங்கம் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டிருக்குமாயின் நாம் இந்தியா உட்பட உலக நாடுகளிடம் செல்ல வேண்டி ஏற்பட்டிருக்காது.
எம்மை பொறுத்தவரை எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு எந்தெந்த வழிகளைக் கையாள வேண்டுமோ அந்தந்த வழிகளை நாம் கையாளுவோம். தீர்வு தொடர்பில் அரசாங்கம் உளப்பூர்வமான ஆர்வம் கொண்டிருக்குமாயின் என்னதான் கூட்டமைப்பு உலக நாடுகளிடம் சென்று கூறினாலும் தீர்வு இங்கு மட்டும் தான் என்று கூறியிருக்காது.

Ex TELO: சிவராம் நினைவு கருத்தரங்கில் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றுகிறார்!


Published on April 25, 2012-11:33 am   ·   No Comments
சுவிஸ் சிவராம் நினைவு மன்றம் நடத்தும் சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானமும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3மணிக்கு  Swiss Universal College Conference Hall, Bahnhofstr 6, 8952 Schlieren (ZH)என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
இக்கருத்தரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்ற உள்ளார்.

நண்றி !
http://www.thinakkathir.com/?p=35204
மௌனம் கலைத்த சிறீதரன் – தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் – சரிதம் ஆசிரியர் பீடம்!(காணொளி)
April 1st, 2012 அன்று வெளியிடப்பட்டது
Posted Image
சரிதம் இணையத்தளம் தொடங்கப்பட்டது முதல் இற்றைவரையில் தேசியத்திற்கான பயணத்தில் பயணிக்கும் தலைவர்களின் பாதைகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தே வந்திருக்கின்றது. இதனால் ஆசியர் பிடத்திற்கு நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆசியர் பீடத்தினர் துரோகிகள் என்றும் சில கட்சிகளின் எடுபிடிகள் என்றும் கூட விமர்சிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனாலும் கூட பொது நோக்கம் அறுவடை என்பதால் தனிப்பட்ட விமர்சனங்களைப் பெரிதாக தலைகளில் தூக்கிக் கொண்டு சரியானதைப் பிழை என்றோ, பிழையானதை சரி என்றோ தடம் மாறுவதற்கு சரிதம் ஆசியர் பீடம் தயார் நிலையில் இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் சரிதம் இணையத்த தளத்தினால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஒரு கட்சியாக வரித்துக் கொள்ளுதல், தனியான ஒரு கட்சியாக மக்கள் மத்தியில் பணி செய்தல் போன்ற விடயங்களையே நாங்கள் இதுகால வரையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். இச் செயற்பாட்டில் இருந்து விலகிச் செல்வபவர்களை விமர்சிக்கவும் தவறவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற அனைத்துக் கட்சிகளையும் கலைத்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கட்சிகளின் கூட்டமைப்பு அல்ல) என்ற பெயரில் கட்சியினைப் பதிவு செய்யவேண்டும் என்பதே எமது வலியுறுத்தலின் பிரதான விடயமாக விளங்கியது. இந்த விடயங்களின் சாராம்சத்தினை வெளிப்படுத்தும் வகையில் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன். சிவஞானம் சிறீதரன் வெளியிட்டிருக்கின்ற கருத்துகள் அனைத்திற்கும் சரிதம் ஆசியர் பீடம் மனம் திறந்த வரவேற்பினைத் தெரிவித்துக் கொள்கிறது.
சிறீதரன் வெளியிட்ட கருத்துக்களும், அவற்றின் முக்கியத்துவங்களும்!
சுமந்திரனின் கருத்துக்களுக்கு கண்டனம்!
தமிழீழ விடுதலைப்புலிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் தமது ஏக பிரதிநிதிளாக ஏற்றுக்கொள்ளவில்லை, ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் வேலையற்றிருந்த இளைஞர்கள் போன்ற கருத்துக்களை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளிப்படுத்தியிருந்தமையை கடுமையாகவும் நேரடியாகவும் சாடியிருக்கின்ற சிறீதரன் அவற்றினை நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றார்.
உயிர் கொடுக்க மட்டும் இளைஞர்கள்! அரசியலுக்கு ஏன் முதியவர்கள்?!
ஒவ்வொரு கட்சியினரும் தமது கட்சிகளைப் பலப்படுத்துவதில் குறியாக இருப்பதாகவும், தமது கட்சிகளுக்கு பாரம்பரியங்கள் உண்டு எனத் தெரிவித்துக் கொண்டு தமது கட்சி சார்ந்தோரின் நினைவு நிகழ்வுகளைக் கடைப்பிடிக்கவே முற்படுகின்றனர் ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக உயிர்களைத் தியாகம் செய்தவர்களை நினைத்துப் பார்க்கவோ அவர்களுக்கு நினைவு நிகழ்வுகளை நடத்தவோ யாரும் தயார் நிலையில் இல்லை. இரத்தம் சிந்தவும், உயிர்களைக் கொடுக்கவும் மட்டும் தான் இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். அரசியல் என்று வரும் போது ஏன் முதியவர்கள் இளைஞர்களுக்கு வழிவிடுகிறார்கள் இல்லை என்றும் சிறீதரன் கேள்வி எழுப்பியிருக்கின்ற விடயங்கள் உண்மையின் பிரதிபலிப்புக்கள்.
ஜெனீவாத் தீர்மானத்திற்கு புலம்பெயர் மக்களின் பங்களிப்பும் முக்கியமானது!
ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு உரிமை கோரமுடியாது என்பதையும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு புலம்பெயர் அமைப்புக்களும், புலம்பெயர் மக்களும் ஆற்றிய பங்களிப்புக்களையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். கூட்டமைப்பில் தலைமைத்துவத்தில் இருக்கின்ற ஒருசிலர் தீண்டத்தகாத பொருட்களாக புலம்பெயர் மக்களைப் பார்ப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்ற நிலையில் சிறீதரன் தனது உரையில் புலத்தில் உள்ளவர்களைப் பற்றி புகழ்ந்து தள்ளியிருக்கின்றார்.
கூட்டமைப்பு எதனையும் செய்யவில்லை!
கட்சிகளைக் கலைத்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பாதையில் பயணிக்க அனைவரும் முன்வரவேண்டும். அதற்கு எவரும் தயார் நிலையில் இல்லை. கடந்த ஆண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்வதற்காக தேர்தல்கள் திணைக்களத்திடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு அது நிராகரிக்கப்பட்டதாகவும் ஒவ்வொரு தொகுதிகளுக்கும், பிரதேச சபைகளுக்கும் குழுக்களை அமைக்கவேண்டும். அவற்றின் ஊடாகப் பணிகளைச் செய்யவேண்டும். இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வேலைத்திட்டம் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை அவர் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.
சிறீதரன் ஏன் விமர்சிக்கப்பட்டார்?
ஆக, சிறீதரன் எடுத்திருக்கின்ற அதிரடி முடிவுகளும் அதற்கு முன்னர் அவர் விமர்சிக்கப்பட்டமைக்கான காரணங்களையும் திரும்பிப்பார்க்க சரிதம் இணையம் முற்படுகின்றது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞான் சிறீதரன் அரசியலுக்குள் பிரவேசிக்கும் போது வன்னியின் குரலாக போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குள் இருந்து செயற்படுகின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மக்களின் பிரதிநிதியாகவே அவர் செயற்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதனைவிடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சிகளின் கூட்டணிக்குள் அரசியல் கட்சிகளின் சாயம் இன்றி தெரிவு செய்யப்பட்ட ஒருவராக அவர் இருந்தமையால் அவர் கூட்டமைப்பு என்ற அடையாளத்தினை மட்டும் கொண்டவராகவே பார்க்கப்பட்டார் அவ்வாறே செயற்படுவார் என்றும் நம்பப்பட்டிருந்தது. ஆனாலும் கூட அவரது அடையாளப்படுத்தல் தமிழரசுக்கட்சி என்பதாகவே இருந்தது. ஜனநாயகப் பாதையில் பயணிப்பதாகத் தெரிவித்து தமிழரசுக்கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் என்று பார்த்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற ஏனைய கட்சிகள் கடந்தகாலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளோடு எதிர் நின்று போராடிய இயங்களைச் சேர்ந்தவை, அவை தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்தவையாகக் கொண்டால் அதற்கு தமிழரசுக்கட்சியும் விதிவிலக்கல்ல. ஈபிஆர்எல்எப்பினால் தியாகிகள் தினம் கொண்டாடப்படுவது போன்று தமிழரசுக்கட்சினால் தமிழரசுக்கட்சியின் தளபதி(!) அமிர்தலிங்கத்திற்கும் நினைவு நிகழ்வு கடைப்பிடிக்கப்படுகின்றது என்பது வெளிப்படையான விடயம்.
இவ்வாறு கட்சிகள் ஒவ்வொருவரும் தமது கட்சிகளில் அல்லது இயக்கங்களில் இருந்து மறைந்தவர்கள் நினைவாக நிகழ்வு நிகழ்வுகளைக் கொண்டாட, வன்னியில் இருந்து வந்த சிவஞானம் சிறீதரன் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீழ்ந்த முத்துக்களுக்கான குரலாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் தமிழரசுக்கட்சியாகவே தன்னை அடையாளப்படுத்த முற்பட்டார். அதுவும் அவர் விமர்சனங்களை எதிர்கொள்ள ஒரு காரணமாக அமைந்தது. இதனைவிடவும், தமிழரசுக்கட்சியும் அவருக்கு முழுமையான விசுவாசத்தினை காட்டவில்லை. அவரை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித் தலைவராக அறிவித்த தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா ஒரு கட்டத்தில் தானே தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் என்று சொல்லிக்கொண்டார். அதேவேளை மன்னாரைச் சேர்ந்த வி.ரி.சிவகரன் என்பவர், தான் தான் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் என்று சொல்லிக் கொள்கிறார். எனவே இந்த இடத்தில் ஒரு சரியான முடிவினை எடுத்து தமிழரசுக்கட்சி செயற்படவில்லை.
சிவஞானம் சிறீதரனை தமக்குள் அழைத்துக்கொள்வதன் மூலம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்கின்ற தீவிர சிந்தனை உடையவர்களாக உருவாகுவோரின் எண்ணிக்கையினைக் குறைப்பதற்கு தமிழரசுக்கட்சித் தீவிர செயற்பாட்டாளர்கள் முற்பட்டனரோ அல்லது சிறீதரன் ஜனநாயகப்பாதை என்பதை அடையாளப்படுத்துவதற்கு தமிழரசுக்கட்சியின் ஊடாக தன்னை நிலைநிறுத்த முற்பட்டாரோ? என்பதற்கான பதிலினை அவரே வெளிப்படுத்த வேண்டும்.
கிளிநொச்சியிலும் சிவஞானம் சிறீதரனின் ஒழுங்குபடுத்தலில் தமிழரசுக்கட்சிக் கிளை, தமிழரசுக்கட்சி இளைஞர் அணிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பு, அம்பாறை ஈறாக தமிழரசுக்கட்சிக் கிளைகள் அமைப்பது தொடர்பில் சிறீதரன் உரையாற்றியிருந்தார்.
இவற்றினைவிடவும் கிளிநொச்சியில் அவரது அன்பக அலுவலத்தில் தமிழரசுக்கட்சி என்ற பெயர்பலகையும் வைக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சியில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் குறிப்பாக அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கிலும் தமிழரசுக்கட்சி என்ற பெயர் மிகப் பெரிதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிய அளவிலும் எழுதப்பட்ட பதாதையே கட்டப்பட்டிருந்தது.
இவ்வாறான சம்பவங்களுடன் அண்மைய தகவலின் படி மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் மாநாடு ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அதன் போது சில தீர்மானங்களை நிறைவேற்ற தமிழரசுக்கட்சி முற்படுவதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. அதன் சாராம்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளில் 75 வீதமான அதிகாரம் தமிழரசுக்கட்சிக்கு வழங்கப்படவேண்டும். ஏனைய 25 வீதமான அதிகாரம் என்பது ஏனைகட்சிகளுக்கும் வெளியில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் என்பதாகும். இந்த விடயம் நிறைவேற்றப்பட்டால் கட்சிகள் சாராது கூட்டமைப்பினை நேசிக்கின்ற அல்லது ஆதரிக்கின்ற ஒரு நபர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நினைத்துப் பார்க்க முடியுமா?
கடந்த ஆண்டு தேர்தல்கள் திணைக்களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதற்கான முன்மொழிவு கொடுக்கப்பட்டு அது இன்றுவரை தடைப்பட்டு இருப்பதற்கான காரணம் தமிழரசுக்கட்சி ஒப்புதல் கடிதம் குடுக்கவில்லை என்பதை இந்த இடத்தில் மீளவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எனவே, இவ்வாறான நிலைப்பாட்டில் தமிழரசுக்கட்சி செயற்படுகின்றபோது சிவஞானம் சிறீதரன் தமிழரசுக்கட்சிக்கு முண்டுகொடுப்பது அல்லது அவர்களைச் சார்ந்து நிற்பது என்பது பொதுக் கொள்கைஉடைய, எந்தக் கட்சியையும் சாராது தனியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற எண்ணப்பாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு தமிழின உணர்வாளர்களையும் தூரவைப்பதாகவே அமைந்துவிடும்.
சிறீதரனிடம் பகிரங்க வேண்டுகோள்!
ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இந்தியாவின் நிலைப்பாட்டில் மட்டும் மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை. சிவஞானம் சிறீதரனின் அரசியல் போக்கிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்புரிமை பெற்றபோது சிவஞானம் சிறீதரன் இருந்தது போன்றதான நிலைப்பாட்டினை மீண்டும் அவர் எடுத்திருக்கின்றார் என்றே சரிதம் ஆசியர் பீடம் பார்க்கின்றது.
ஆனாலும் கிளிநொச்சியில் இருந்து நாடாளுமன்றம் சென்ற சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடையாளமாகவே தொடர்ந்தும் இருக்கவேண்டுமே தவிர தமிழரசுக்கட்சியாக அல்ல என்பதை அவர் செயற்படுத்திக் காட்ட வேண்டும்.
மேநாள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியாக மக்கள் மத்தியில் நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்று தெரிவித்த அவர் கிளிநொச்சியில் தனியான நிகழ்ச்சியினை நடத்தப்போவதாகவும் தெரிவித்திருந்தார். அந்த விடயத்தினை நாங்களும் வரவேற்று நிற்கின்றோம். அந்த நிகழ்விலும், யாழ்ப்பாணம் மட்டக்களப்பு உட்பட்ட இடங்களில் நடைபெறவுள்ள கருத்தரங்குகளிலும் தமிழரசுக்கட்சி என்ற பெயரினைத் தவிர்த்து, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ற பெயரை மட்டும் பயன்படுத்தி நடைபெறும் நிகழ்வுகளை தமிழ்த்தேசியக் கட்சியின் நிகழ்வுகளாகவே வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழரசுக்கட்சி என்ற விடயத்தினை தேர்தல்கள் அண்மிக்கும் போது மக்களுக்கு நினைவுறுத்துவதற்காவே பயன்படுத்தலாம். காரணம் சின்னத்தினை மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக. தமிழரசுக்கட்சி என்பது எப்போதோ கைவிடப்பட்டு தமிழர் விடுதலைக்கூட்டணி தோற்றம் பெற்றது. அதன் பின்னர் மற்றொரு வளர்ச்சிப்படியாகவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உருவெடுத்தது. எனவே மீண்டும் தமிழரசுக்கட்சியை நோக்கிப் போவது எந்தவகையில் ஏற்புடையது.
சிவஞானம் சிறீதரன் எடுத்த முடிவினை நாங்கள் வரவேற்கிறோம். தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்சமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகிறது. அதனையும் அழிந்து போக அனுமதிக்க முடியாது என்று அவர் ஆக்ரோசமாகத் தெரிவித்திருப்பது ஆறுதல் தருகிறது.
ஆனாலும் அவரது முடிவுதொடர்பில் தமிழரசுக்கட்சி இரு வேறு முனைப்புக்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். முதலாவது பணிந்துபோவது போலக் காட்டிக்கொண்டு சிறீதரனை மீண்டும் தமது வலைக்குள் இழுத்துக் கொள்வது. இரண்டாவது மிரட்டுதல் மூலம் சாதித்தல், மிரட்டுதல் என்கிற போது தேர்தல் வரும் போது வேட்பாளராக நியமிக்கமாட்டோம் எனத் தெரிவிப்பது. இந்த இரண்டு விடயங்களில் ஏதாவது ஒன்றின் மூலமாக சிறீதரன் அணுகப்படலாம் என்றே எண்ணமுடிகிறது. இருப்பினும் சிறீதரன் அவற்றினை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
தமிழீழத் தேசியக் கொடி விவகாரத்தினையும் சிறீதரன் குறிப்பிட்டிருந்தார், குறித்த விடயத்தினையும் சரிதம் ஆசிரியர் பீடமே செய்திவாயிலாக வெளிப்படுத்தியிருந்தது. அந்தத் தகவலையும் எமக்குத் தந்தவர்கள் தமிழரசுக்கட்சி சார்ந்தவர்கள் தான் என்பதையும் பகிரங்கப்படுத்த விரும்புகிறோம்.
அரியநேத்திரன், யோகேஸ்வரன், சரவணபவன் ஆகியோருக்கு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய உங்களுக்கு, சிவஞானம் சிறீதரன் எடுத்த முடிவு தொடர்பிலும் அவரது பகிரங்கமான கருத்துப் பரிமாற்றல் மூலமும் தெளிவான செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. அந்தச் செய்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற கட்சிசாராத உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் பாரிய பொறுப்பு உண்டு என்பது.
ஏனைய கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சியில் இரா.சம்பந்தன், மாவை.சேனாதிசாரா, செல்வராசா அவர்களுடன் சுமந்திரனை இணைத்துக் கொண்டாலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். ஈபிஆல்எல்எப், ரெலோ ஆகிய கட்சிகளில் இவ்விரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே இருக்கின்றனர். அப்பாத்துரை விநாயகமூர்த்தியினை தமிழரசுக்கட்சியாக அடையாளப்படுத்துவற்கு அவர்கள் முற்படவில்லை. எனவே பெரும்பான்மை என்று பார்க்கின்ற போது தமிழரசுக்கட்சிக்கு நிகராக கட்சிகள் சாராது போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அமைந்திருக்கின்றது.
இவர்கள் நால்வரும் இணைந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சரியான பாதைக்கு கொண்டுவர முற்படுவதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்வதற்கு முன் நின்று உழைத்திருக்க வேண்டும். இவர்கள் யாருக்கும் பின்னால் செல்ல வேண்டும் என்று நினைக்காமல் மற்றையவர்கள் எமக்குப் பின்னால் வரவேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டிருக்கவேண்டும். இனியும் செயற்படலாம். பதவிகளைத் தூக்கி எறியத் தயார் என்று மீளவும் மீளவும் சிறீதரன் வலியுறுத்தித் தெரிவித்திருக்கின்றார். இதன் மூலம் எதற்காகவும் பணிந்துபோகவேண்டிய தேவை இல்லை என்பதை அவர் வலியுறுத்தியிருக்கின்றார். இதனையே மற்றைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமக்கான நிலைப்பாடாக வைத்திருப்பார்கள் என்று எண்ணமுடிகிறது.
கடந்த ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுவதற்காக தேர்தல்கள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட போது கட்சி சாராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்புரிமையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதில் கொண்டு இனிவரும் நாட்களில் முன்னெடுக்கும் பதிவு நடவடிக்கைக்கு கட்சிகள் சாராதவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பொதுநோக்கை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சரிதம் ஆசியர் பீடம் வேண்டி நிற்கின்றது.
சரியான பாதைகளை நோக்கி பயணிப்பவர்கள் தவறான பாதையில் சென்றாலும் மீண்டும் சரியான பாதையை அடைந்தால் இலக்கு என்பது தாமதித்தாலும் வந்தேசேரும்.

..
சரிதம் ஆசிரியர் பீடம்

Ex TELO: Sritharan MP New Interview

சரிதம் ஆசிரியர் பீடம்



.

Ex TELO : தந்தை செல்வாவின் 114வது ஜனனதினம்

March 31, 2012


மூதறிஞர் தந்தை செல்வாவின் 114வது ஜனனதின வைபவம் யாழ்ப்பாணத்தில் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. இன்று காலை 9:30 மணிக்கு யாழ். நகரில் உள்ள தந்தை செல்வா நினைவாலயத்தில் உள்ள அவரது நினைவு தூபிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் மாலையணிவித்து அவரது ஜனனதின திருநாளை உணர்வு பூர்வமாக கொண்டாடினர்.
இந் நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சி. சிறிதரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ அரசியல் பிரிவுத் தலைவர் சிவாஜிலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி, தமிழரசுக் கட்சியின் இணைச்செயலாளர் சீ.வீ.கே சிவஞானம், தந்தை செல்வா அறங்காவலர் குழு தலைவரும் தென் இந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் அடிகளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Thursday, 19 April 2012

விபத்தில் சிக்கியவர்கள் இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர்கள் (இரண்டாம் இணைப்பு)



இன்று காலை ரம்பாவெல – மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட அறிவிப்பாளர் நூரானியா ஹசன் உயிரிழந்ததோடு மேலும் அறுவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன  தெரிவித்தார்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதன் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று இரவு யாழ். நோக்கி பயணமாகியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயணித்த வாகனம் இன்று காலை 4.30 மணியளவில் மிஹிந்தலை – ரம்பாவ பகுதியில் லொறியொன்றுடன் மோதியுள்ளது. இவ்விபத்தில் வானில் சென்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், ஸ்தலத்திலேயே சிரேஷ்ட ஒலிபரப்பாளர் நூரானியா ஹசன் மரணமடைந்துள்ளார்.
திரு., திருமதி யோகராஜன், ஜபீர், சந்திரகாந்தன், ஜெகன்மோகன் ஆகிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடன் விளம்பர பிரிவைச் சேர்ந்த சந்தன ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


(இரண்டாம் இணைப்பு)


Sunday, 15 April 2012

தம்நிலை மறந்து குரைக்கும் “ரெலோ” சிவாஜிலிங்கம்..

தம்நிலை மறந்து குரைக்கும் “ரெலோ” சிவாஜிலிங்கம்..


ANI.cat-dog.gifபாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற நிதியமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் TELO சிவாஜிலிங்கம் எழுந்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சபைக்குள் நுழைந்தார். அப்போது உரையாற்றிய சிவாஜிலிங்கம், அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் துரோகக் கும்பல் தமது இனத்துக்கு எதிராக செயற்படுகின்றது. பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது போல் எம்மைக் கேட்கிறார்கள். இவர்கள் மூழ்கிக் கொண்டிருக்கும் அரசுக் கப்பலில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாய் செத்த பின்னர் உண்ணிகள் கழருவது போல் இவர்களும் ஓடி வருவார்கள் என்று கூறினார்.
ஏனைய தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களும் டக்ளஸ் தேவானந்தாவை வசைபாடத் தொடங்கினர். இதையடுத்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சிலர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இரு தரப்புகளிலுமிருந்து கூச்சல்கள், பலத்த சிரிப்பொலிகள், மேசைகளில் அடித்து ஆரவாரங்கள் ஆவேசக் கத்தல்கள் என பெரும் சத்தம் ஏற்பட்டதால் சபை 10 நிமிடங்கள் வரை அதிர்ந்தது.
பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் சர்ச்சை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அத்துரலிய ரத்ன தேரர் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவ்வேளை மீண்டும் டக்ளஸுக்கும் சிவாஜி லிங்கத்திற்குமிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
பின்னர் சிவாஜி லிங்கத்தை சக எம்.பி.யான ஷ்ரீகாந்தா சமாதானப்படுத்தி அமரவைத்தார். அப்போது சிவாஜிலிங்கம், உங்களின் எந்தப் பயங்கரவாதச் சட்டமும் எம்மை அசைக்க முடியாது. நீங்கள் எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் நாம் அதனை முறியடிப்போம். பயங்கரவாத தடைச் சட்டத்தால் ஜே.வி.பி.யினர் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். இவ்விடத்தில் அவர்கள் எம்மோடு சேர்ந்திருப்பார்கள். முடிந்தால் எம்மை கட்டுப்படுத்திப் பாருங்களென அரசுக்கு சவால்(?) விடுத்தார்.




(அமிர்தலிங்கத்தை கொன்றது யார்? TELO தலைவரைக் கொன்றது யார்? அது மட்டுமல்ல தமது அமைப்பின் பலநூற்றுக்கணக்கான போராளிகளை கொன்ற புலிகளுடனேயே மேற்படி TELO சிவாஜிலிங்கம் இணைந்திருக்கும் போது இவர் இப்படியான குற்றச்சாட்டை முன்வைப்பது என்ன நியாயமென? அரசியல் விமர்சகர்கள் அங்கலாய்க்கின்றனர். )




Thanks….WWW.ILAKKU.COM
ANI.cat-dog.gif

ShareThis

Saturday, 14 April 2012

Sivajilingam ( Jaffna MP ) Interview on his Visit to India




கருணாநிதியின் விரதம் பற்றி Sivajilingam

SIVAJILINGAM EXPOSES DMK CONGRESS PROPAGANDA

vino.MP

Vino Voice

Selvam

Selvam Voice new




Selvam Adaikkalanathan Voice

தமிழ் ஈழ விடுதலை இயக்கப் பாடல்கள் !

 வணக்கம் !
Play Songs


Adobe Photoshop Tamil Tutorial - 10. Saving files in different Formats

வணக்கம் !

Photoshop Tamil Tutorial - 09. Creating Decorative Text

வணக்கம் !

[Adobe Photoshop Tamil Tutorial] - 08. Changing T-Shirt Color

வணக்கம் !

Adobe Photoshop Tamil Tutorial - 07. Changing Eye Color and Changing H...

வணக்கம் !

Photoshop Tamil Tutorial - 06. Changing Background and Creating ...

வணக்கம் !

Photoshop Tamil Tutorial - 05. Filter and Blending Options

வணக்கம் !

Photoshop Tamil Tutorial 04 Selection & Trimming

வணக்கம் !

Photoshop Tamil Tutorial - 03. Color modes and brushes

வணக்கம் !

Photoshop Tamil Tutorial - 2.2 Advanced Photoshop Tools

வணக்கம் !

Photoshop Tamil Tutorial - 2.1 Basic Photoshop Tools

வணக்கம் !

Adobe Photoshop Tamil Tutorial - 01. Interfaces and Workspaces

வணக்கம் !
These videos are, for who does not know Photoshop even advanced user can see and gather the hot-keys and tips. If you want any advanced tutorial means please mail me at "srivignesh35@gmail.com"



Friday, 13 April 2012

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது !

சிறி சபாரத்தினம்
எனக்கு பிடித்த ஒரு தலைவர். சிரித்தமுகம். உயரமான கம்பீரமான அழகான எல்லோரையும் கவரும் தோற்றம். குட்டிமணி தங்கத்துரையின் வழிமூலம் என்ற பல சாதகமான அம்சங்களைக்கொண்ட தலைவர். இவர் ஆயுதத்துடன் வந்ததால் கொலை செய்யப்பட்டார் என்றும் இல்லை நிராயுதபாணியாக வந்தும் கொலை செய்யப்பட்டார் என்றும் இன்றுவரை அதற்கு தெளிவு இல்லை. இவருடைய அழிப்பு எம்மையெல்லாம் கவலை கொள்ள வைத்தது. எனது தம்பி ரெலோவிலிருந்துதான் இங்கு வந்திருந்தான். அவனும் இதை மிக காட்டமாக எதிர்த்தான்.
அதேநேரம் இங்கு புலிகளுக்குள்ளும் இது பற்றிய கருத்து மோதல்கள் இருந்தன. சிலர் ஒதுங்கி பின்னர் மீண்டும் இணைந்தனர். ஆனாலும் புலிகள்தொடர்ந்து தமது பிரச்சாரங்களையும் உதவி கோரலையும் செய்தே வந்தனர். எனக்கும் எம்போன்ற பலருக்கும் பல கூட்டங்கள் நடாத்தப்பட்டு விளக்கங்களும் ஆதாரங்களும் முன் வைக்கப்பட்டன.
இந்த நேரத்தில் தான் இந்த பிரச்சினையிலிருந்து தப்பிய ரெலோவைச்சேர்ந்த எனதுமைத்துணர் ஒருவர் ஊரிலிருந்து வந்து சேர்ந்தார்.
அவரைச்சந்தித்து பேச முயன்றேன். அவர் மதுவுக்கு அடிமையாகியிருந்தார். மிகவும் ஆத்திரத்துடனிருந்தார். அவர் என்னிடம் சொல்லிய ஒரு கருத்து என்னை மிகவும் சிந்திக்கத்தூண்டியது. அது
"புலிகள் ஒருத்தர் கூட இல்லாமல் அழிப்போம். இனி எமக்கு வேறு எந்த இலட்சியமுமில்லை." பல நாள் இழுபறிகளுக்குப்பின்
நான் ஒரு முடிவுக்கு வரவேண்டி ஏற்பட்டது.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது எதற்காக?
அதன் இலட்சியம் என்ன?
அதை யார் கொண்டு செல்லப்போகின்றனர்...?
எமது இலட்சியக்கனவை கொண்டு செல்ல தகுதியானவர்கள் யார்???
இதில் முக்கியமான ஒன்றை இங்கு சொல்லவேண்டும்
நாங்கள் எமது போராட்டத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வால் தடுமாறிநிற்க......
இன்னொரு கூட்டம் இதையே காரணமாக வைத்து புலிகளை வசைபாட ஆரம்பித்தனர். புலிகளை வசைபாடுவதை மட்டுமே செய்தனர். இன்றுவரை அதையே செய்கின்றனர். மேலே ஒரு திரியில் சோபா சக்தியின் உரையைப்பார்த்தேன். அதில் அவர் சொல்கின்றார் ரெலோ அழிப்புடன் எமது போராட்டம் முடிந்துவிட்டதாக. உண்மைதான் இவர்கள் அன்றுடன் எமது போராட்டத்துக்கு முடிவுரை எழுதிவிட்டார்கள். அதில் சோபா சக்தியிலிருந்து இங்கு வாந்தி யெடுக்கும் ARJUNம் அடக்கம். ஆனால் பெரும் பான்மை தமிழ் மக்கள் தமிழரது போராட்டம் தனது இலக்கை நோக்கி பயணிக்க என்ன செய்யவேண்டும்என்றே அன்று சிந்தித்தார்கள்.


Edited by விசுகு, 02 July 2011 - 07:03 PM.
உறவுகளிற்கு உதவுவோம்..நேசக்கரம்.. மேலதிக விபரங்களிற்கு இங்கு அழுத்துங்கள்
http://nesakkaram.org/

சனங்களே ஒத்துழைக்க மறுத்தபிறகு இந்தச் சனத்துக்கு போராடி என்ன போராடாட்டி என்ன என்று புலிகளும் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அதில் எந்த தவறையும் நான் காணமாட்டேன். நான் சொன்ன சனங்களில் நான் வன்னி மக்களை மட்டும் சொல்லவில்லை.

#82 கோமகன்

    அரசவை உறுப்பினர்
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,221 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:தேடல், தத்துவவிசாரணை
Posted 02 July 2011 - 08:11 PM


உங்கள் தொடரை ஆளமாக உள்வாங்குகின்றேன் அதேவேளையில் உங்களிடமிருந்து நேரடியான பதில் எனக்கு வேண்டும். விடுதலைப்புலிகள் விமர்சனத்திற்கு அப்பால்பட்டவர்களா???? இல்லை என்றால் எதுவரை அவர்கள் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள்????????? மழுப்பல் இல்லாமல் சொல்லுங்கள் .
நாம் என்னத்தை திரும்பத்திரும்ப செய்கிறோமோ அதுவே நாமாக

ஆகிவிடுகிறோம். சிறப்பு என்பது செயலில் இல்லை, பழக்கத்தில் இருக்கிறது .

#83 கிருபன்

    வலைப்போக்கன்
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,144 posts
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்
Posted 02 July 2011 - 08:45 PM
விமர்சனம் நேர விரயம், மாற்றுக் கருத்தாளர்களின் திசை திருப்பும் முயற்சிகள்.
ரென்சிஸ் விளையாடும்போது போட்டியாளர்கள் கட்டத்திற்குள் மட்டும்தான் பார்க்கவேண்டும். பார்வையாளரின் கூச்சல்களைத் தவிர்த்து ஆட்டத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றி நிச்சயம். இப்படித்தான் விடுதலைப் போராட்டமும்.

Spoiler

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

#84 விசுகு

    Advanced Member
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 8,544 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........
Posted 02 July 2011 - 08:59 PM
View Postkomagan, on 02 July 2011 - 08:11 PM, said:


உங்கள் தொடரை ஆளமாக உள்வாங்குகின்றேன் அதேவேளையில் உங்களிடமிருந்து நேரடியான பதில் எனக்கு வேண்டும். விடுதலைப்புலிகள் விமர்சனத்திற்கு அப்பால்பட்டவர்களா???? இல்லை என்றால் எதுவரை அவர்கள் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள்????????? மழுப்பல் இல்லாமல் சொல்லுங்கள் .



எனது தனிப்பட்ட மழுப்பலற்ற பதில்

பொதுத்தொண்டுகளில் ஈடுபடும் எவரையும் விமர்சிக்கமுடியும். விமர்சிக்கவேண்டும். ஆனால் அந்த பொது திட்டத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் அல்லது அதனுடைய தேவையை உணர்ந்தவர்களது விமர்சனங்களே கவனத்திலெடுக்கப்படவேண்டும். அதற்கு அப்பால் பார்வையாளர்களாக இருப்போரின் விமர்சனத்தை கிருபன் சொன்னதுபோல் கவனத்திலெடுக்கத்தேவையில்லை. (அதனால் பொதுத்தொண்டாற்றுவோருக்கு இழப்புக்கள் வராதவரை).
அந்தவகையில் விடுதலைப்புலிகளும் பொதுத்தொண்டர்கள். விமர்சனமும் அதை ஏற்றதாக இருக்கவேண்டும். இல்லையென்றால் எவருக்கு என்ன பிரயோசனம்...............???
உறவுகளிற்கு உதவுவோம்..நேசக்கரம்.. மேலதிக விபரங்களிற்கு இங்கு அழுத்துங்கள்
http://nesakkaram.org/

சனங்களே ஒத்துழைக்க மறுத்தபிறகு இந்தச் சனத்துக்கு போராடி என்ன போராடாட்டி என்ன என்று புலிகளும் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அதில் எந்த தவறையும் நான் காணமாட்டேன். நான் சொன்ன சனங்களில் நான் வன்னி மக்களை மட்டும் சொல்லவில்லை.

#85 shanthy

    முல்லைமண்
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,491 posts
  • Gender:Female
  • Location:Germany
Posted 02 July 2011 - 11:42 PM
View Postவிசுகு, on 02 July 2011 - 06:49 PM, said:
சிறி சபாரத்தினம்
எனக்கு பிடித்த ஒரு தலைவர். சிரித்தமுகம். உயரமான கம்பீரமான அழகான எல்லோரையும் கவரும் தோற்றம். குட்டிமணி தங்கத்துரையின் வழிமூலம் என்ற பல சாதகமான அம்சங்களைக்கொண்ட தலைவர். இவர் ஆயுதத்துடன் வந்ததால் கொலை செய்யப்பட்டார் என்றும் இல்லை நிராயுதபாணியாக வந்தும் கொலை செய்யப்பட்டார் என்றும் இன்றுவரை அதற்கு தெளிவு இல்லை. இவருடைய அழிப்பு எம்மையெல்லாம் கவலை கொள்ள வைத்தது. எனது தம்பி ரெலோவிலிருந்துதான் இங்கு வந்திருந்தான். அவனும் இதை மிக காட்டமாக எதிர்த்தான்.


சிறீ சபாரட்ணத்தை முதல் சுட்டது டொச்சர் என்று அழைக்கப்பட்ட போராளி வடக்குபுன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்தவர். பின்னர் தான் கீரோ வந்து கதை முடிந்தது. டொச்சர் இரண்டாம் கட்ட ஈழப்போரில் வசாவிளான் பகுதியில் வீரச்சாவடைந்தார். (மேஜர் டொச்சர்)

குட்டிமணியினால் குட்டிச்சுவரான குடும்பத்தில் எனது குடும்பம் முக்கியமானது.
தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723
Email - rameshsanthi@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh
உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்

Posted Image
முல்லைமண் வலைப்பூ

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -

#86 SUNDHAL

    Advanced Member
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,473 posts
  • Location:Australia
Posted 03 July 2011 - 01:05 AM
ஆரம்ப கட்டங்களில் டெலோவில் திறமையாக போரட கூடிய போராளிகள் பலர் இருந்ததாக கூற கேள்விபட்டிருக்கிறன் ஆனால் உண்மை பொய் nதியாது 1970 மற்றும் 80 களில் நடை பெற்ற போரட்டங்களை தெளிவாக அறிந்தவர்கள் தான் இதை பற்றி கூறனும்....
விசுகு அண்ணா தொடருங்கள்....பழைய வரலாறுகளை அறிய ஆவல்.....
ஹே....நான் நெருப்பு...நீ பருப்பு....நான் ஆகாயம் நீ? வெங்காயம்.....நான் சிங்கம்...நீ அசிங்கம்..........

#87 Elugnajiru

    உறுப்பினர்
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 796 posts
Posted 03 July 2011 - 09:06 AM
ரெலோவினது சாவகச்சேரி காவல்நிலையத்தாக்குதல் பிரசித்தமானது. இதில் தலைமையேற்றுப் பங்கெடுத்தவர் தாஸ் ஆவார். அதேவேளை பொபி எனும் இன்னுமொரு இரண்டாம் நிலைத்தலைவரும் ரெலோவில் இருந்தார். அவர் யாழ் ஆனைப்பந்தியடி திருநாவுக்கரசு கார்க்கராச் உரிமையாளது மகன். யாழ் வைத்தியசாலையில் பொபி தாஸைப் போட்டுத்தள்ளியதுடன் ரெலோ எனும் விடுதலை இயக்கம் தனது முடிவுரையை எழுதத் தொடங்கியது. சிறந்த தலைமைத்துவப் பண்புகளை தன்னகத்தே கொண்டவர் சிறி சபாரத்தினம் என்பதை புலிகளும் ஏற்பர் ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட விடுதலை இயக்கம் இரண்டாம் நிலைத்தலைவர்களால் தறிகெட்டு ஓடியதை அவரால் தடுக்கமுடியவில்லை. இவ்வியக்கம் இப்போதும் தொடர்ந்திருந்தால் தமிழீழப்போராட்டத்தின் செல்திசை வேறுமாதிரி அமைந்திருக்கும். ரெலோ அழிப்பு நடவடிக்கையில் மிஞ்சிய ஒருவர் ஒபராய் தேவனது தம்பியார் சுபாஸ்மட்டுமே காரணம் கிட்டருடன் பலவிடையங்களில் ஒத்துழைத்ததால எனக் கேள்விப்பட்டேன். சிறி அண்ணரது இறுதிக் கணங்கள்பற்றி பல தகவல்கள் கோண்டாவில் அன்னுங்கை ஒழுங்கைப் பிரதேசத்தில் மறைந்திருந்தாகவும் இறுதிவேளை கப்பிப் புகையிலைச் செடிகளுக்குள் மறைவிடம்தேடியதாகவும். கிட்டர் சம்பவ இடத்தில் நின்றாரெனவும் .இறதிக்கணங்களில் "கிட்டு உன்னோட ஒருக்காக் கதைக்கவேணுமென" அவ்வேளையில் வெடி விழுந்ததாகவும் கூறுபவர் உண்டு.

#88 I.V.Sasi

    Advanced Member
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,202 posts
  • Gender:Male
  • Location:மட்டக்களப்பு , தென் தமிழீழம்.
Posted 03 July 2011 - 03:11 PM
View PostElugnajiru, on 03 July 2011 - 09:06 AM, said:
ரெலோவினது சாவகச்சேரி காவல்நிலையத்தாக்குதல் பிரசித்தமானது. இதில் தலைமையேற்றுப் பங்கெடுத்தவர் தாஸ் ஆவார். அதேவேளை பொபி எனும் இன்னுமொரு இரண்டாம் நிலைத்தலைவரும் ரெலோவில் இருந்தார். அவர் யாழ் ஆனைப்பந்தியடி திருநாவுக்கரசு கார்க்கராச் உரிமையாளது மகன். யாழ் வைத்தியசாலையில் பொபி தாஸைப் போட்டுத்தள்ளியதுடன் ரெலோ எனும் விடுதலை இயக்கம் தனது முடிவுரையை எழுதத் தொடங்கியது. சிறந்த தலைமைத்துவப் பண்புகளை தன்னகத்தே கொண்டவர் சிறி சபாரத்தினம் என்பதை புலிகளும் ஏற்பர் ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட விடுதலை இயக்கம் இரண்டாம் நிலைத்தலைவர்களால் தறிகெட்டு ஓடியதை அவரால் தடுக்கமுடியவில்லை. இவ்வியக்கம் இப்போதும் தொடர்ந்திருந்தால் தமிழீழப்போராட்டத்தின் செல்திசை வேறுமாதிரி அமைந்திருக்கும். ரெலோ அழிப்பு நடவடிக்கையில் மிஞ்சிய ஒருவர் ஒபராய் தேவனது தம்பியார் சுபாஸ்மட்டுமே காரணம் கிட்டருடன் பலவிடையங்களில் ஒத்துழைத்ததால எனக் கேள்விப்பட்டேன். சிறி அண்ணரது இறுதிக் கணங்கள்பற்றி பல தகவல்கள் கோண்டாவில் அன்னுங்கை ஒழுங்கைப் பிரதேசத்தில் மறைந்திருந்தாகவும் இறுதிவேளை கப்பிப் புகையிலைச் செடிகளுக்குள் மறைவிடம்தேடியதாகவும். கிட்டர் சம்பவ இடத்தில் நின்றாரெனவும் .இறதிக்கணங்களில் "கிட்டு உன்னோட ஒருக்காக் கதைக்கவேணுமென" அவ்வேளையில் வெடி விழுந்ததாகவும் கூறுபவர் உண்டு.

செத்த வீடு என்றால் அதில் பினமும் நான் தான் கலியான வீடு என்றால் அதில் மாப்பிள்ளையும் நான் தான் என்பது அமெரிக்காவுக்கு பொருந்தும் ஆனால் நமக்கு?
அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!

#89 நீலமேகம்

    நெருப்பு
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 432 posts
  • Gender:Male
  • Location:டீக்கடை,கள்ளுக்கடை,படித்துறை
Posted 03 July 2011 - 05:51 PM
View PostElugnajiru, on 03 July 2011 - 09:06 AM, said:
ரெலோவினது சாவகச்சேரி காவல்நிலையத்தாக்குதல் பிரசித்தமானது. இதில் தலைமையேற்றுப் பங்கெடுத்தவர் தாஸ் ஆவார். அதேவேளை பொபி எனும் இன்னுமொரு இரண்டாம் நிலைத்தலைவரும் ரெலோவில் இருந்தார். அவர் யாழ் ஆனைப்பந்தியடி திருநாவுக்கரசு கார்க்கராச் உரிமையாளது மகன். யாழ் வைத்தியசாலையில் பொபி தாஸைப் போட்டுத்தள்ளியதுடன் ரெலோ எனும் விடுதலை இயக்கம் தனது முடிவுரையை எழுதத் தொடங்கியது. சிறந்த தலைமைத்துவப் பண்புகளை தன்னகத்தே கொண்டவர் சிறி சபாரத்தினம் என்பதை புலிகளும் ஏற்பர் ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட விடுதலை இயக்கம் இரண்டாம் நிலைத்தலைவர்களால் தறிகெட்டு ஓடியதை அவரால் தடுக்கமுடியவில்லை. இவ்வியக்கம் இப்போதும் தொடர்ந்திருந்தால் தமிழீழப்போராட்டத்தின் செல்திசை வேறுமாதிரி அமைந்திருக்கும். ரெலோ அழிப்பு நடவடிக்கையில் மிஞ்சிய ஒருவர் ஒபராய் தேவனது தம்பியார் சுபாஸ்மட்டுமே காரணம் கிட்டருடன் பலவிடையங்களில் ஒத்துழைத்ததால எனக் கேள்விப்பட்டேன். சிறி அண்ணரது இறுதிக் கணங்கள்பற்றி பல தகவல்கள் கோண்டாவில் அன்னுங்கை ஒழுங்கைப் பிரதேசத்தில் மறைந்திருந்தாகவும் இறுதிவேளை கப்பிப் புகையிலைச் செடிகளுக்குள் மறைவிடம்தேடியதாகவும். கிட்டர் சம்பவ இடத்தில் நின்றாரெனவும் .இறதிக்கணங்களில் "கிட்டு உன்னோட ஒருக்காக் கதைக்கவேணுமென" அவ்வேளையில் வெடி விழுந்ததாகவும் கூறுபவர் உண்டு.


ரெலோவுடன் எதற்காக புலிகள் மோதினர் எப்படி அது ஆரம்பித்தது என்று யாராவது விளக்கமாக சொல்ல முடியுமா...?
நல்லவங்க கண்ணீர் சிந்தினா கெட்டவங்க ரத்தம் சிந்தியே ஆகணும்..

www.facebook.com/நெருப்பு நீலமேகம்

#90 இசைக்கலைஞன்

    Advanced Member
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,863 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D
Posted 03 July 2011 - 06:00 PM
View Postநெருப்பு நீலமேகம், on 03 July 2011 - 05:51 PM, said:
ரெலோவுடன் எதற்காக புலிகள் மோதினர் எப்படி அது ஆரம்பித்தது என்று யாராவது விளக்கமாக சொல்ல முடியுமா...?

மோதல் வடமராச்சிப் பகுதியிலேயே ஆரம்பித்தது என நினைக்கிறேன்..! தொடக்கத்தில் ரெலோ உறுப்பினர்கள் புலிகள் உறுப்பினரைத் தேடித் திரிந்தார்கள். எப்படி ஆரம்பமானது என்று தெரியவில்லை. புலிகள் மறைந்து செயற்பட்டார்கள்.

பின்னர் புலிகளின் உறுப்பினர் லிங்கம் என்பவர் ரெலோ முகாமுக்கு பேசுவதற்காக அழைக்கப்பட்டார். அங்கு சென்ற இடத்தில் அவர் சுட்டுக்கொல்லப் பட்டார். அதன்பின்னர் பதுங்கியிருந்த புலிகள் ரெலோவை வேட்டையாடியதாக ஞாபகம்..! :unsure:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#91 sathiri

    Advanced Member
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,035 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்
  • Interests:எதுவும் இல்லை
Posted 03 July 2011 - 06:41 PM
View Postநெருப்பு நீலமேகம், on 03 July 2011 - 05:51 PM, said:
ரெலோவுடன் எதற்காக புலிகள் மோதினர் எப்படி அது ஆரம்பித்தது என்று யாராவது விளக்கமாக சொல்ல முடியுமா...?
மேலதிக விபரங்களிற்கு
http://sathirir.blog...-post_8037.html
Edited by sathiri, 03 July 2011 - 06:45 PM.
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#92 நீலமேகம்

    நெருப்பு
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 432 posts
  • Gender:Male
  • Location:டீக்கடை,கள்ளுக்கடை,படித்துறை
Posted 03 July 2011 - 07:42 PM
View Postsathiri, on 03 July 2011 - 06:41 PM, said:
மேலதிக விபரங்களிற்கு
http://sathirir.blog...-post_8037.html


நன்றி சாத்திரி அண்ணை...
நல்லவங்க கண்ணீர் சிந்தினா கெட்டவங்க ரத்தம் சிந்தியே ஆகணும்..

www.facebook.com/நெருப்பு நீலமேகம்

#93 arjun

    Advanced Member
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,293 posts
  • Gender:Male
  • Location:canada
Posted 03 July 2011 - 08:05 PM
கதை கதையாம் பகுதியில் பதிவதால் வரலாறாக இல்லாமல் கதையாகவே எடுத்துக்கொள்வோம்.

நீங்கள் எழுதும் கதைகள் மிக இன்ரரஸ்டாக போகுது.அதுவும் சாத்திரியாரின் நடிகைகள் கதை சுப்பெர்.
லண்டனில் இருக்கும் குடிமி ரவி சொன்னதுதான் ஞாபகம் வருது.அதில இருக்கின்ற எல்லோருக்கும் அந்தளவுதான் இருக்கு அதுக்கு மேல எதிர்பார்க்ககூடாது என்று.

#94 விசுகு

    Advanced Member
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 8,544 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........
Posted 03 July 2011 - 09:20 PM
View Postarjun, on 03 July 2011 - 08:05 PM, said:
கதை கதையாம் பகுதியில் பதிவதால் வரலாறாக இல்லாமல் கதையாகவே எடுத்துக்கொள்வோம்.

நீங்கள் எழுதும் கதைகள் மிக இன்ரரஸ்டாக போகுது.அதுவும் சாத்திரியாரின் நடிகைகள் கதை சுப்பெர்.
லண்டனில் இருக்கும் குடிமி ரவி சொன்னதுதான் ஞாபகம் வருது.
அதில இருக்கின்ற எல்லோருக்கும் அந்தளவுதான் இருக்கு அதுக்கு மேல எதிர்பார்க்ககூடாது என்று.

திரு. arjun
இது கதையோ வரலாறோ எதுவகையில் தாங்கள் போட்டாலும்
இது அடுத்த தலைமுறை நடந்தவற்றை அறியவேண்டும் என்பதற்காகவே பதிகின்றேன். உங்களுக்கும் பல அனுபவங்கள் இருக்கும் முடிந்தால் அவற்றையும் இங்கு பதியுங்கள் அல்லது நான் எழுதுவதில் ஏதும் தப்பிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்
.
அதைவிடுத்து தொடர்ந்து கவுட்டுக்கொட்டிக்கொண்டிருப்பதால் எதையும் சாதித்துவிடப்போவதில்லை. எதையும் ஆவணப்படுத்தவும் உதவப்போவதில்லை.
:( :( :(
உறவுகளிற்கு உதவுவோம்..நேசக்கரம்.. மேலதிக விபரங்களிற்கு இங்கு அழுத்துங்கள்
http://nesakkaram.org/

சனங்களே ஒத்துழைக்க மறுத்தபிறகு இந்தச் சனத்துக்கு போராடி என்ன போராடாட்டி என்ன என்று புலிகளும் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அதில் எந்த தவறையும் நான் காணமாட்டேன். நான் சொன்ன சனங்களில் நான் வன்னி மக்களை மட்டும் சொல்லவில்லை.

#95 sathiri

    Advanced Member
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,035 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்
  • Interests:எதுவும் இல்லை
Posted 03 July 2011 - 09:25 PM
View Postarjun, on 03 July 2011 - 08:05 PM, said:
கதை கதையாம் பகுதியில் பதிவதால் வரலாறாக இல்லாமல் கதையாகவே எடுத்துக்கொள்வோம்.

நீங்கள் எழுதும் கதைகள் மிக இன்ரரஸ்டாக போகுது.அதுவும் சாத்திரியாரின் நடிகைகள் கதை சுப்பெர்.
லண்டனில் இருக்கும் குடிமி ரவி சொன்னதுதான் ஞாபகம் வருது.அதில இருக்கின்ற எல்லோருக்கும் அந்தளவுதான் இருக்கு அதுக்கு மேல எதிர்பார்க்ககூடாது என்று.
அதிலை இருந்தவைக்கு அவ்வளவுதான் ஆனால் குடுமி ரவிக்கு ஒரு குடுமி மேலதிகமாய் உள்ளது அவ்வளவுதான். :lol: :lol:
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#96 SUNDHAL

    Advanced Member
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,473 posts
  • Location:Australia
Posted 03 July 2011 - 10:25 PM
அர்ஜீன் அண்ணா நீங்களும் உங்கள் அணுபவங்கள தொடரா தரலாமே...?
ஹே....நான் நெருப்பு...நீ பருப்பு....நான் ஆகாயம் நீ? வெங்காயம்.....நான் சிங்கம்...நீ அசிங்கம்..........

#97 arjun

    Advanced Member
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,293 posts
  • Gender:Male
  • Location:canada
Posted 03 July 2011 - 11:25 PM
வரலாறு அடுத்த தலைமுறைக்கு போகவேண்டும் என்பது மிக உண்மை.

நீங்கள் உங்கள் சம்பந்தமான,நான் ஏன் புலியில் சேர்ந்தேன் என்று எழுதினால் மிக நன்றாக இருக்கும்,அதைவிட்டு போராட்டம் சம்பந்தமாக யாரோ சொன்னதைக்கேட்டு அதையே வரலாறு என எழுதக்கூடாது.
பிரான்ஸ்சில் உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் சந்தோசமாக வாசிக்கலாம்.

சாத்திரியாரின் நடிகை கதை.சாலிக்கிராமத்தில் இருந்த நளினியின் வீட்டில் டெலோ இருந்தது உண்மை.அதற்கு இப்படி ஒரு கதையை கட்டக்கூடாது.நான் நளினியயை சந்திக்கும் போது சிறி சபாரத்தினத்தை தெரியுமா என இந்த கிகிசுவை மனதில் வைத்துத்தான் கேட்டேன்.வீட்டு புரோக்கரால் இலங்கை தமிழர்களுக்கென வீடு கொடுக்கப்பட்டதாகவும் இப்போ வாடகை பெறவே புறோக்கர் கஸ்டப்படுவதாகவும் யார் சிறி என கேட்டார்.
இயக்கத்தில் ஒருவரை பற்றி பிழையாக கதை பரவுதென்றால் அவர் ஒன்றில் ஓடிவிட்டார் அல்லது போடப்போகின்றார்கள் என்று அர்த்தம்.இவை எல்லாம் விளங்கக்கூடிய நிலையில் பலர் இல்லை.தலைமை சொல்லே மந்திரம்.இது அனைத்து இயக்கத்திற்கும் பொருந்தும்.பல உதாரணங்கள் எழுதலாம்.
புளொட்டின் சரித்திரமே அக்கு வேறு ஆணிவேறாக வேறு தளங்களில் எழுதப்பட்டுவிட்டது.இப்போதும் நேசன் என்பவர் என்.எல்.எப்.டீ இணையத்தில் எழுதுகின்றார்வாசித்தால் போராட்டத்திற்கு என்ன நடந்தது என பலருக்கு விளங்கும்.படங்கள் ,சாட்சிகளுடன் எழுதுகின்றார்.சரி பிழை பற்றி எம்முடன் கதைப்பார்.
நான் எனக்கு தெரிந்த உண்மையான புலிகள் பற்றிய சிறுவிடயங்களை எழுதினால் கூட நிர்வாகம் தூக்கிவிடும்.வன்னியசிங்கம் வீட்டில் கொள்ளையடித்து கொலைகள் செய்தவர்கள் யார்?விசுகுவின் முதலாம் பதிவு போல் ஒரு சம்பவம் தான் இது.

#98 குமாரசாமி

    மப்புறுப்பினர்
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,896 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்
Posted 04 July 2011 - 12:07 AM
முந்தியொருக்கால் ஜேர்மனியிலை நளினியின்ரை......அதுதான் அவவின்ரை புறோக்கிறாம் நடத்துறம்...நடத்தப்போறம் எண்டுசொல்லிகாசு சேர்த்தவை....ஆனால் இண்டு வரைக்கும் நளினியையும் காணேல்லை அவவின்ரை புறோக்கிராமையும்காணேல்லை. குடுத்த காசையும் காணேல்லை அந்த காசிலை பெட்டிக்கடை நடத்துற ஆக்களைத்தான் காணக்கிடைக்குது. :lol:
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"

#99 arjun

    Advanced Member
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,293 posts
  • Gender:Male
  • Location:canada
Posted 04 July 2011 - 03:00 AM
சிறீ சபாரத்தினம் கொல்லப்பட்ட இடம் கோன்டாவில் வடக்கில் போய்பார்த்தேன்.அந்தவிட்டுக்காரர்கள் இப்போ லண்டனில் இருக்கின்றார்கள்.சிறீயத்தேடிவந்து அவர்கள் வீட்டில் இல்லை என்று திரும்பும் நிலையில் அடுத்ததாக இருந்த சிறிய குடிசையப்பார்த்திருக்கின்றார்கள்.அதற்குள் சுடச் சுட சாப்பாடு தயாராக இருந்திருக்கு.சந்தேகத்தில் தோட்டங்க்கள் எல்லாம் தேடும்போது வீட்டிற்கு பின்னாலுள்ள புகையிலை தோட்டத்திற்குள் சிறி இருந்து பிடிபட்டு சுடப்பட்டார்.தோட்டத்திற்குள் இருந்த அப்படியே நகர்ந்து உரும்பிராய்க்கு போய் புளொட்டால் இந்தியாவிற்கு கொண்டுசெல்லப்பட்டர் bobby.
ஏன் சிறி அந்தவீட்டிற்கு போனார்.அந்தவீட்டுக்கார மகனும் டெலோவில் இருந்தார் அவர் கல்வியங்காட்டில் சுடப்பட்டு கோயிலொன்றுக்குள் போய் 2 நாளாக நினைவுதிரும்பாத நிலையில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையின் பின் ராகீமின் உதவியால் புலிகளிடம் இருந்து தப்பி இப்போ கனடாவில் உள்ளார்.கை முழுக்க ஒரே சூட்டுக்காயங்கள்.புலியைபற்றிக்கேட்டால் அந்தமாதிரி வார்த்தைகள் வரும்.
Edited by arjun, 04 July 2011 - 03:01 AM.

#100 நீலமேகம்

    நெருப்பு
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 432 posts
  • Gender:Male
  • Location:டீக்கடை,கள்ளுக்கடை,படித்துறை
Posted 04 July 2011 - 11:09 AM
சாத்திரி அண்ணையின் பதிவின் படி ரெலோதான் புலிகளை வம்புக்கிழுத்திருக்கிறது என்பது தெளிவாகத்தெரிகிறது...அது மட்டுமன்றி சமாதானம் பேச வந்த புலி உறுப்பினரையும் சுட்டுகொன்று சகோதரர்களையே இந்தியா எட்டப்பர்களுடன் சேர்ந்து அளிக்கத்துணிந்திருக்குறார்கள்..இதற்கு மேல் பொறுமையாக புலிகள் இருந்திருக்க வேண்டும் என்று இந்த மாற்றுகருத்து சொல்பவர்கள் எதிர்பார்க்கிறார்களா..? நானும் என் வழியும் என்று இருக்கும் என் வழியில் குறுக்கிடுவது மட்டுமன்றி என்னைக்கொல்லவும் வரும்போது நான் எப்படிச் சும்மா இருக்க முடியும்....?
நல்லவங்க கண்ணீர் சிந்தினா கெட்டவங்க ரத்தம் சிந்தியே ஆகணும்..

www.facebook.com/நெருப்பு நீலமேகம்