Thursday, 28 February 2013

டெலோ ( Vinthan ) கண்டனம் !

யாழில் பத்திரிகை விநியோக முகாமையாளர் மீதான தாக்குதலுக்கு டெலோ கண்டனம்

telo.Vinthanயாழ் தினக்குரல் பத்திரிகையின் பத்திரிகை விநியோகப் பணியாளரும், அலுவலகப் பணியாளருமாகிய எஸ்.சிவகுமாரன் மீது இன்று அதிகாலை புத்தூரில் இடைமறித்த காடையர்கள் அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கிக் காயப்படுத்தி பத்திரிகைகளையூம் பறித்துக் கொழுத்தி அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையூம் முற்றாக எரித்து நாசமாக்கியூள்ளனர். இதன் மூலம் நாசகாரிகளின் மற்றுமோர் வேள்வியொன்று யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது. முற்றுமுழுதாக முப்படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யாழ் குடாநாட்டில் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான மிலேச்சத்தனமான கண்மூடித்தனமான வெறிச் செயல்களைச் செய்யூம் ஈனப்பிறவிகள் யாரும் இதுவரைக்கும் கைதுசெய்யப்படப்பட்டதாகவூம் சட்டத்தின் முன்னிறுத்தித் தண்டிக்கப்பட்டதாகவூம் வரலாறு இல்லை. தமிழினத்திற்காகவூம் அதன் உரிமைகளுக்காகவூம் நேர்மையோடும் துணிச்சலோடும் குரல் கொடுக்கும் பொதுமக்கள் அரசியலாளர்கள் ஊடகவியலாளர்கள் ஊடக நிறுவனங்கள் அதன் பணியாளர்கள் மீதான அச்சுறுத்தல்களும் கெடுபிடிகளும் வன்முறைகளும் போர் முடிந்த பின்பு முள்ளிவாய்க்காலோடு முற்றுப்பெற்றதாக கூறப்பட்ட இனவன்முறையூம் அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் ஆட்சியாளர்களாலும் அதன் ஒட்டுக்குழுக்களாலும் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்டே வருகின்றது.
சிவகுமாரன் மீதான தாக்குதல் சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் மகிந்த சிந்தனையில் எழுந்த ஓர் காட்டுத்தர்பார் நடவடிக்கையாகும். இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் அரசின் உண்மையான கோர முகம் இப்பொழுது உலகத்திற்கு அம்பலமாகிக் கொண்டு வருகின்றது. இதைச் சர்வதேசமும் பார்த்தும் பாராமல் இருக்கின்றது. இதன் காரணமாக சிறுபான்மையினராகிய எம்மீது தொடர்ந்து அச்சுறுத்தல்களை நிகழ்த்தி அடிமை வாழ்வூக்குள் வைத்திருக்கலாம் என அரசு பகல் கனவூ காண்கின்றது. இந்நாட்டில் தமிழ் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் இருப்புக்கும் உரிமைகளுக்கும் இந்த அரசு பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே உடனடியாக சர்வதேசம் இதில் தலையிட்டு இத்தகைய செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்து இவற்றுக்கெதிராக உடனடி நீதி விசாரணைகளைக் கோர வேண்டும் எனக் கோருகின்றேன்.
கே.என்.விந்தன் கனகரத்தினம்
யாழ் மாநகரசபை உறுப்பினர்
தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

கூட்டமைப்பு அரசியல் கட்சியாகிறது !

அரசியல் கட்சியாக கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு 15 பேர் கொண்ட குழு அமைப்பு – அடைக்கலநாதன் எம்.பி தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது மற்றும் குழுக்களை அமைப்பது தொடர்பில் ஆராய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளிலுமிருந்து தலா மூவர் வீதம் 15 பேரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதுடன் இக் குழு மார்ச் மாதம் 20 ஆம் திகதி இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது குறித்து கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளில் பல தமிழரசுக் கட்சியை வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கொழும்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் ஐந்து கட்சிகளினதும் தலைவர்கள், பிரதிநிதிகள் கூடி நீண்ட நேரம் கட்சியைப் பதிவு செய்வது குறித்து ஆராய்ந்தனர்.இந்தக் கூட்டத்தின் போதே கூட்டமைப்பை பதிவு செய்வது, குழுக்கள் அமைப்பது மற்றும் பல விடயங்களை ஆராயவென ஒரு குழுவை அமைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் குழுவில் அங்கம் வகிக்கவென ஒரு கட்சியிலிருந்து ஐவர் பெயரிடப்படுவர். இருந்தபோதிலும் மூவரே குழுக்கூட்டங்களில் கலந்து கொள்வர் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் விவசாயிகள் போராட்டம் !

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்!

மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட விவசாயிகள், மூன்று கோரிக்கைகளை முன் வைத்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.இன்று காலை 9 மணியளவில் மன்னார், முருங்கன், செம்மண் தீவு விளையாட்டு மைதானத்தில் இவ் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், . டெலோ வின் வினோ நோகராதலிங்கம், மக்கள் விடுதலை முன்னனியின் உறுப்பினர் சாமிவேல் செல்வக்குமார், மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல் கொள்வனவு செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு எரிபொருள் மாணியம் வழங்கப்பட வேண்டும், விவசாயிகளுக்கு வரட்சி மற்றும் வெள்ள நிவாரணங்கள் உடன் வழங்குவதோடு வங்கிக் கடனை உடன் இரத்துச்செய்ய வேண்டும் என்ற மூன்று அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதப் போராட்டம் இடம் பெற்றது. இதன்போது ஜனாதிபதியிடம் ஒப்படைக்குமாறு மகஜர் ஒன்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திரவிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த யுத்த பேரழிவின் போது மோசமான இழப்புக்களுக்கும், பின்னடைவுகளுக்கும், முகம் கொடுத்த வன்னி பெருநிலப்பரப்பின் ஒருபகுதியினர், மன்னார் மாவட்ட விவசாயிகளாவர்.2006ஆம் ஆண்டு மகா காலப்போக அறுவடை நெருங்கிய காலப்பகுதியில் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டதால் விவசாயத்தில் பெருமளவு முதலீட்டைச் செலவிட்ட நாம்  அதனைப்பெற அறுவடை செய்ய முடியாது. அவற்றை முழுமையாக கைவிட்டு இடம்பெயர வேண்டிய அவலத்திற்குள்ளானோம்.வங்கிகளிடமும், தனியாரிடமும், விவசாயத்திற்காக பெறப்பட்ட கடன்கள் மீளச்செலுத்த முடியாமலும், விவசாய செலவுக்காக அடைவு வைத்த நகைகள் மீட்க முடியாமலும், உள்ளன. 2010 மீள்குடியமர்த்தப்பட்ட நாம் முதலீடு எதுவும் இல்லாமையால் அவ்வாண்டு காலபோகச் செய்கையில் ஈடுபடமுடியாத அவலத்திற்கு உள்ளானோம்.எனினும் 2011ஆம் ஆண்டில் ஓரளவு விவசாயத்தில் ஈடுபட்டோமாயினும் அறுவடை செய்த நெல்லும் சந்தைப்படுத்த வாய்ப்பு இல்லாமையால் தனியாருக்கு குறைந்த  விலைக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், முதலீட்டை மீட்க முடியாது கடனில் தத்தளித்தோம்.2012இல் செய்த வேளாண்மை ஒருபுறம் நீர்ப் பற்றாக்குறையாலும், வெள்ளப் பெருக்கினாலும், அழிவுக்குட்பட்டதால் இவ்வாண்டிலும் பாரிய நட்டத்தையே சந்தித்தோம்.இக்காலத்தில் எரிபொருள் விலை உயர்வு, விதை நெல் தட்டுப்பாடு, பசளை வகைக்கான மானியங்கள், வழங்கப்படாமை போன்ற காரணங்களால் உற்பத்திச் செலவைக் கூட மீட்டெடுக்க முடியாத நிலைக்குள்ளானோம். இக்காரணங்களாலும் சந்தைபடுத்தும் வாய்ப்பு எம்மாவட்டத்தில் இல்லாமையாலும், உள்ளீடுகளுக்கான மானியங்கள் இல்லாமையாலும், எரிபொருள் விலை அதிகரிப்பாலும், உற்பத்திச் செலவை மீட்டெடுக்க முடியாத நிலையில் தனியார் சுரண்டல் காரணமாக 66 கிலோ மூடைக்கு பதிலாக 75 கிலோ மூடைக்கு வழங்கப்பட்டதோடு, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு குறைவாகவே விற்கவேண்டிய  அவலம் எமக்கு ஏற்பட்டது.மீள்குடியமர்வின் பின் எமக்கு வழங்கப்பட வேண்டிய வீட்டுவசதி, வாழ்வாதார வசதி, போன்ற நிவாரண வசதிகள் எவையும், எமக்கு வழங்கப்படாத நிலையில் எமது முயற்சிகளுக்கு எதுவித பலனும் பெற முடியாத அவலத்திற்கும் உள்ளாகியுள்ளோம்.எனவே இவற்றை கருத்தில் கொண்டு கீழ்வரும் குறைந்த பட்ச நிவாரணங்களையாவது, உடனடியாக வழங்கி உதவுமாறு பணிவுடன் வேண்டி ஒர் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இக்கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். வங்கி கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.அடைவு வைக்கப்பட்ட நகைகளுக்கான வட்டிகளை ரத்து செய்வதோடு மீட்புக்காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிபொருள் விலை உயர்வுக்கெதிராகவும், விவசாய உள்ளீடுக்காகவும், உரிய மானியம் வழங்க வேண்டும்.நெல்லுக்குரிய தரமான விலை நிர்ணயம் செய்து உறுதிப்படுத்தப்பட வேண்டும். சந்தை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.விதைநெல் உற்பத்திக்கு ஊக்கமளிப்பதுடன் உற்பத்தி செய்யப்பட்ட விதை நெல்களை அத்தாட்சிபடுத்தும், உத்யோகஸ்தர்களின் சேவையை அதிகரிக்க வேண்டும்.வறட்சி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பயிர் பாதிப்புக்குள்ளாகும் போது, காப்புறுதி செய்தவர்களுக்கு காப்புறுதி தொகைகளை தாமதமின்றி வழங்க வேண்டும்.மேற்படி கோரிக்கைகளின் மீது விரைவான நடவடிக்கையெடுக்குமாறு மன்னார் மாவட்ட விவசாயிகளான நாம் பணிவுடன் வேண்டுகின்றோம்’ என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு திராய்மடு கிருஷ்ணா வெற்றி !

Photo: மட்டக்களப்பு திராய்மடு கிருஷ்ணா விளையாட்டுக் கழகத்தின் 24வது வருட பூர்தியை முன்னிட்டு நடார்த்தப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் இறுதிப் போட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார் வெற்றிக் கிண்ணம் வழங்கிவைத்தார்
மட்டக்களப்பு திராய்மடு கிருஷ்ணா விளையாட்டுக் கழகத்தின் 24வது வருட பூர்தியை முன்னிட்டு நடார்த்தப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் இறுதிப் போட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார் வெற்றிக் கிண்ணம் வழங்கி சிறப்பித்தார்.

Thursday, 7 February 2013

மீனவ அபிவிருத்திக்குழு கூட்டம் !

மன்னார் மாவட்ட மீனவ அபிவிருத்திக்குழு கூட்டம்
Posted by Administrator on Sunday, February 3, 2013 · 


மன்னார் மாவட்ட மீனவ அபிவிருத்திக்குழு கூட்டம் ஜெய்க்கா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம், மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் மெரான்டா, உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின் இணைப்பாளர், இராணுவத்தினர், பொலிஸார், கடற்படை உயரதிகாரிகள், மன்னார் மாவட்ட மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.கடலினுள் பற்றை வைத்து கணவாய் பிடித்தல், பட்டிவலை மூலம் மீன்பிடித்தல் போன்ற செயற்பாடுகளால் ஏற்படும் நன்மை, தீமைகள் தொடர்பில் மீனவர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். கணவாய் பிடிப்பதற்காக கடலினுள் பற்றையை வைத்து விட்டு ஜீ.பி.எஸ். என்னும் தொழில்நுட்;பக் கருவியை பயன்;படுத்தி குறித்த இடங்களை மீண்டும் அடையாளம் கண்டு கணவாய் பிடிக்கின்றனர். இதனால் குறித்த கணவாய் பிடிக்கும் தொழிலாளர்களுக்கு உபகரணச் செலவு மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.ஆனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகளை கொள்வனவு செய்து கடற்றொழிலில் ஈடுபடுகின்றபோது அவ்வலைகள் கணவாய் பிடிப்பதற்காக வைக்கப்படுகின்ற பற்றைகளில் சிக்கி வலை அறுந்துபோவதாகவும் இதனால் தாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் மீனவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.இதேவேளை, கடற்கரையோரங்களில் பட்டி வைத்து தொழில் செய்வதால் கரைவலை தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்புமை பூசி அழிக்கப்பட்டுள்ளது !

திருகோணமலையில் டெலோ வினால் நிர்மாணிக்கப்பட்ட தியாகிகள் நினைவு மண்டபத்தின் பெயர்ப் பலகை கறுப்புமை பூசி அழிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இன்று இலங்கையின் 65ஆவது சுதந்திரதின பிரதான நிகழ்வுக்கு திருமலை நகரசபை முதல்வர் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள  தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வினால் நிர்மாணிக்கப்பட்ட வெலிக்கடை தியாகிகள் நினைவு மண்டபத்தின் பெயர்ப் பலகை கறுப்புமை பூசி அழிக்கப்பட்டுள்ளது.இன்றைய சுதந்திர தின பிரதான நிகழ்வுகளில் பங்குபற்றுமாறு திருமலை நகரசபைத் தலைவருக்கு விசேட அழைப்பு எதுவும் அனுப்பப்படவில்லை. இவருக்கு சாதாரண குடிமகனுக்கு வழங்கப்படும் அழைப்பே அனுப்பப்பட்டுள்ளது. பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் கூட மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நகர சபைத் தலைவருக்கு வழங்கப்படவில்லையென்று விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர்கள் சுதந்திர தினம்!

எப்போது தமிழர்களுக்கு தனியுரிமை கிடைக்கின்றதோ அன்று தான் தமிழர்கள் சுதந்திர தினம்! டெலோ சிவாஜிலிங்கம்

இலங்கை தமிழர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் இன்று சுதந்திரதினம் கொண்டாட முடியாத நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.இலங்கையின் 65வது சுதந்திரதினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது. இந்நிலையிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தமிழர்களுக்கான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. அதேசமயம் 10 லட்சம் தமிழர்களின் வாக்குரிமைகள் மீறப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், ‘வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றதுடன், தனிச்சிங்கள சட்டம், தனிச்சிங்கள நாடாக இருக்கின்றதுடன், தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சுதந்திர தினத்தினை கொண்டாட முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.எப்போது தமிழர்களுக்கு தனியுரிமை கிடைக்கின்றதோ அன்று தான் தமிழர்கள் சுதந்திர தினம் கொண்டாட முடியும்.இன்று நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பட்டு, தமிழர்கள் மீதான படுகொலைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் இனவாதங்கள் அழிக்கப்பட்டு தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் காலத்தில் தான் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் அன்றைய தினத்தினைதான் தமிழர்கள் சுதந்திர தினமாக கொண்டாட முடியும்.அவ்வாறான நிலைப்பாட்டில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தற்போது இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.