Tuesday, 15 January 2013

தமிழ் உறவுகள் எம்மை மறந்துவிடவில்லை !!

மட்டக்களப்பு மக்களுக்கு சுவிஸ் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் நிவாரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. செங்கலடி ஆண்டான்குளம், ஐயன்கேணி மற்றும் கொக்குவில், புன்னைச்சோலை ஆகிய கிராமங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு அரிசி, சீனி, பருப்பு, சோயா இறைச்சி, நெத்தலிக் கருவாடு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரமுகரும், கிழக்கு மாகாண சபை தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் உறுப்பினருமான இந்திரகுமார் பிரசன்னா இந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் கையளித்தார்.புலம்பெயர்ந்து சென்றாலும் தமிழ் உறவுகள் எம்மை மறந்துவிடவில்லை என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடும்போது செய்யப்படும் இத்தகைய உதவிகள் காலம் கடந்தும் பேசப்படும். இந்த உறவு தொடர்ந்தும் நிலைக்க வேண்டும். செய்த உதவி சிறியதாக இருந்த போதிலும் உதவி செய்ய வேண்டும் என முன்வந்தவர்களின் மனம் விசாலமானது. எனவே அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம் என நிவாரணப் பொருட்களைக் கையளித்துப் பேசியபோது பிரசன்னா குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment