Saturday, 16 March 2013

மறுப்பும் விளக்கமும் - விந்தன் !

பின் கதவால் உள்நுழைந்து யாழ்.முதல்வராகியவர் யோகேஸ்வரி பற்குணராஜா!– விந்தன் குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 16 மார்ச் 2013, 10:27.24 AM GMT ]
http://www.tamilwin.com/show-RUmryDSaNYfr2.html
 

தற்போதைய மாநகர முதல்வாரன திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் அக் கட்சியில் 4ம் இடத்தில் வெற்றி பெற்றிருந்தார். எப்படியோ பின் கதவால் உள்நுழைந்து முதல்வராகியவர் இன்று மாநகரத்தில் இருந்து கொண்டு என்ன செய்கின்றார் என கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை எதிரணி உறுப்பினர் விந்தன்
யாழ்.மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினர் விந்தன் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:
யாழ்ப்பாணம் நாயன்மார் குளத்தக்கு அருகில் மாநகரத்துக்குச் சொந்தமான வீதி ஒன்றில் பெரும் குழி ஏற்பட்டு இருப்பதாகவும் அக்குழியை ஓலையால் போட்டு மூடி மறைத்துள்ளார்கள் என்றும் செம்மணி வீதியில் நடந்த மரணம் போல் இவ் வீதியிலும் விபத்தினூடாக மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாநகரசபை உறுப்பினர்களாகிய நீங்கள் என்ன பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று மக்கள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
மாநகரசபை ஆளும் தரப்பு தொடர்பாகவும் அவர்களின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகள் தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பிலும் பல்வேறு குறைகளைக் கூறி குற்றம் சாட்டியதோடு செம்மணி வீதியில் ஏற்பட்ட விபத்து சம்பவம் போல் இவ் வீதியிலும் மாநகரசபைக்குச் சொந்தமான ஏனைய வீதிகளிலும் நடப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக சாரப்படச் சொல்லப்பட்ட செய்தியில் தவறுதலாக “செம்மணி வீதி மாநகர சபை எல்லைக்கு உட்பட்டதென்றும் விபத்தில் ஏற்பட்ட மரண சம்பவத்திற்கு மாநகரசபையே பொறுப்பேற்க வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இச் சொற்பதங்கள் என்னால் கூறப்படவில்லை என்பதை நான் மறுப்பதோடு முதல்வரின் பதில் செய்திக்கு நான் சில விளக்கங்களையும் சொல்ல விரும்புகின்றேன்.
முதல்வர் தனது செய்திக்குறிப்பில் நான் மாநகர சபையின் எல்லைக்குள் பிறக்காதவன் என்றும் எனக்கு மாநகரசபை எல்லை தெரியாமல் இருக்கின்றது என்றும் தாங்கள் செய்யும் அபிவிருத்தியைப் பொறுக்க முடியாத நான் குறை கூறுவதையே வழமையாகக் கொண்டுள்ளேன் எனவும் கூறுகின்றார். முதல்வர் அவர்களே நான் 20 வருடங்களாக மாநகரப் பகுதியில் நிரந்தரமாக வசிப்பவன்.
இலங்கையில் பிறந்தவர்கள் மக்கள் ஆதரவு இருந்தால் உள்நாட்டில் எங்கும் தேர்தல் கேட்கலாம் அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மாநகர சபையிலே உறுப்பினர்களாக இருக்கும் என்னைப்போல் வேறு பகுதியில் பிறந்தவர்கள் பல பேர் ஆளும் தரப்பிலும் எதிர் தரப்பிலும் உங்களை விட அதிகமாக வாக்குப் பெற்றவர்கள் இருக்கின்றார்கள் என்பதையும் தாங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
அதிலும் ஆளும் தரப்பில் சட்ட ரீதியாக முதல்வராக தெரிவு செய்யப்பட்டவர் உங்கள் தரப்பில் அதிகமான வாக்கைப் பெற்றதை நீங்கள் மறந்து விட்டீர்களா? என்னோடு சேர்த்து அவர்களுக்குமா மாநகரசபை எல்லை தெரியாது என சொல்ல வருகின்றீர்கள். உங்கள் பின்னணியையும் நீங்கள் சுய பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.
எல்லைகள் தொடர்பாக எமக்கு பாடம் கற்பித்தலை விடுத்து யாழ் மாநகர பகுதிக்குள் மாநகர சபைக்குச் சொந்தமான நூற்றுக்கு மேற்பட்ட நிலங்களையும் கடைகளையும் முறையற்ற விதத்தில் பலகோடி ரூபாய்க்கு விற்றது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினராகிய 8பேர் கடந்த மாதம் தங்களுக்கு முகவரியிட்டு விசேட கூட்டத்தைக் கூட்டும்படி கோரியிருந்தோமே அக்கூட்டத்தைக் கூட்டிவிட்டு இலங்கை லஞ்ச ஊழல் ஆணைக்குழு, இலங்கைக் கணக்காய்வுத் திணைக்களம், வடக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்களம், மாநகர உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம், வடமாகாண உள்ளுராட்சி அமைச்சு, மாநகரசபை உறுப்பினர்கள், மக்கள், ஆகியோருக்கு நீங்கள் நேர்மையானவர்கள் என்றும் உங்கள் அபிவிருத்தி நேர்மையானவவை எனவும், உங்கள் சேவையில் தூய்மை இருக்கின்றது என்பதையும் முடிந்தால் நிருபித்துக் காட்டுங்கள்.
அப்பொழுது தெரியும் யார் பதவி இழந்து வீதியில் அநாதரவாக நிற்பார்கள் என்று உங்களுக்கு இன்னுமொன்றைக் கூற விரும்புகின்றேன் மாநகரசபையைக் கலைத்து விட்டு 23 வட்டாரத்திலும் ஏதாவது ஒரு வட்டாரத்தில் என்னோடு தேர்தல் களத்தில் நின்று பாருங்கள் அப்பொழுது தெரியும் எனக்கு இருக்கும் மக்கள் பலம்.
யாழ் மாநகர சபைக்கு 2009ல் தேர்தல் நடந்த போது கூட்டமைப்புக்கு அதிகமாக வாக்களிக்கக்கூடிய ஆதரவான பகுதிகளை இனங்கண்ட ஈபிடிபி யினர் அப் பகுதியில் அமைந்துள்ள ஒன்பது வாக்குச்சாவடிகளில் அதிகாலை வேளையிலே கைக்குண்டுகளை வீசி பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதனைத் தடுத்ததன் மூலமும் அன்றையதினமும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளை வீதிகளில் மறித்து பறித்துக் கொழுத்தியதன் மூலமும் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்படுத்தி அவர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதனைத் தடுத்ததன் மூலம் சொற்ப வாக்குகளால் கபடத்தனமாக குறுக்கு வழிகளில் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தனர்.
ஆளுந்தரப்பில் வெற்றி பெற்றவர்களில் திரு றீகன் அவர்களே அதிக விருப்பு வாக்குகளால் முதல்வராகவும் தெரிவாகியும் இருந்தார். தற்போதைய மாநகர முதல்வாரன திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் அக் கட்சியில் 4ம் இடத்தில் வெற்றி பெற்றிருந்தார். எப்படியோ பின் கதவால் உள்நுழைந்து முதல்வராகியவர் இன்று மாநகரத்தில் இருந்து கொண்டு என்ன செய்கின்றார் என்பதை எம் மக்கள் அறியாமல் இல்லை.

கே.என்.விந்தன் கனகரத்தினம்
யாழ் மாநகரசபை உறுப்பினர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

No comments:

Post a Comment