Thursday, 28 March 2013

ரெலோவின் மாநாட்டை ஏப்ரலில் நடத்த உத்தேசம் !

ரொலோ என்று அழைக்கப்படும் தமிழர் விடுதலை இயக்கத்தின் 8ஆவது மாநாட்டை ஏப்ரல் 6ஆம் திகதி வவுனியாவில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மகாநாடு கடந்த பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழர் விடுதலை இயக்கத்தினால் அறிவிப்பட்டிருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் மார்ச் மாதத்திற்கு அந்த மகாநாடு பிற்போடப்பட்டது.

எனினும் ஜெனிவா கூட்டத் தொடர் மற்றும் ஜேர்மனில் நடைபெறும் மாநாடொன்று ஆகியவற்றில் தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார்.இதனால் மார்ச் மாதத்திலும் ரொலோ மாநாடு இடம்பெறவில்லை. 

இந்நிலைல் எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டம் வவுனியா மாவட்டத்தில் நடைபெறும் என்றும் மகாநாட்டிற்கான நேரம் மற்றும் இடம் என்பன கட்சியின் தலைவருடன் கலந்துரையாடிய பின்னர் அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment