தமிழ்
ஈழ விடுதலை இயக்கத்தின்; (ரெலோ) எட்டாவது தேசிய மாநாடு; இன்றும் நாளையும்
வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் யெலாளர் நாயகம்
கென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கட்யினால்
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் புதிய உறுப்பினர்கள்
மற்றும் குழூக்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…..
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் எட்டாவது
தேசிய மாநாடு வவுனியா நகர சபை மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி
தொடர்ந்து மாலை ஐந்து மணிவரை நடைபெறவுள்ளது.
இதன் போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக
ஆராயப்படவுள்ளது. இதில் குறிப்பாக கட்சியின் தற்பொதைய நிலைமைகள் மற்றும்
எதிர்காலத் திட்டங்கள் , அரசியல் சமகால நிலைமைகள் , தமிழ் பேசும் மக்கள்
எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் மற்றும் சவால்கள் , கட்சியின் எதிர்காலச்
செயற்பாடுகள் உட்பட கூட்டமைப்பிற்குள் ரெலோவின் செயற்பாடுகள் ஆகியன
தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
இன்று இடம்பெறவுள்ள இக்
கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நாளையதினம் கட்சியின் முக்கிய குழூக்கள்
மற்றும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் உட்பட பல்வெறு குழூக்கள் தெரிவு
செய்யப்படவுள்ளனர்.
கட்சியின் இக் கலதுரையாடலில் பல்வேறு
கட்சிகளைக்ச் சார்ந்த பிரமுகர்கள் கலந்துரையாட்வுள்ளனர் .மேலும் இந்த
எட்டாவது தேசிய மாநாட்டில் வடகிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலுமாக 115
பொதுக் குழூ உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் .
அவர்களிலிருந்து கட்சிக்கான நிர்வாகிகனள்
தெரிவு செய்யப்படவுள்ளதுடன் கட்சினக்கான முக்கி மற்றும் தலைமைக் குழூ
உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இதன் பின்னர் கட்சிய்ன்
மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் புதிய குழூக்கள் தொடர்பில்
வெளியிடப்படுமென்றும் அவர் மேலும் தெரரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment